India Languages, asked by sudhakarselvarani26, 10 months ago

விடுமுறை நாட்களில் சென்று வந்த இடங்களை பற்றி உன் நண்பனுக்கு கடிதம் எழுது​

Answers

Answered by jayasmitamadhan
301

Answer: ல.முத்துசாமி  

                                                                                                                            வேலூர்  

                                                                                                                            06 .06 .2011  

அன்புள்ள  ராஜா,  

                                           நலம் நலமறிய ஆவல். முத்துசாமி

எழுதுவது. நான் சென்ற வாரம் என் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட கன்னியாகுமரி  

சென்றேன். நான் சென்ற ஊர்களுள் இதுவே என்னை மிகவும் கவர்ந்தது.இந்திய பெருங்கடல், வங்காள  

விரிகுடா, அரபிக் கடல் ஆகிய மூன்று கடல்களும் சங்கமிக்கும் இடம்.  இந்தியாவின் தெற்கு  

பகுதியான இவ்விடத்தில் சூரியன் உதயம் ஆகும் போது இரு கண்களுக்கும் விருந்து போல்  

இருக்கும். கடற்கரை எல்லாம் அவ்வளவு அழகு. அங்குள்ள திருவள்ளுவர் சிலை மிகவும்  

தத்ரூபமாக செதுக்கி உள்ளதன் மூலம் தமிழனின் திறமை புலனாகிறது. விவேகானந்தர் நினைவு  

மண்டபம், காந்தி மண்டபம் போன்றவையும் என்னை கவர்ந்தன. நான் மிகவும் மன திருப்தியுடன் ஊர்  

திரும்பினேன். நீயும் ஒரு முறை அங்கு சென்று வா. ஒரு நாள் வீட்டுற்கு அவசியம் வர வேண்டும்.  

                          இப்படிக்கு உன் பதில் கடிதத்தை ஆவலுடன் எதிர் பார்த்து  

கொண்டிருக்கும் ஆருயிர் நண்பன்  

                                                                                                                          ல.முத்துசாமி

Explanation:

Answered by Qwasia
8

விடுமுறை நாட்களில் சென்று வந்த இடங்களை பற்றி உன் நண்பனுக்கு கடிதம்

சென்னை

20.07.2022

அன்புள்ள (உங்கள் நண்பரின் பெயர்)

நலம் நலமறிய ஆவல்.  நான் இங்கே மிகவும் நன்றாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். நமது கோடை விடுமுறையில் நான் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  தேர்வுகள் பரபரப்பாக இருந்தன, நான் மிகவும் ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. இந்த விடுமுறை எனக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. என் தாத்தா பாட்டி என்னை சிம்லாவிற்கு மூன்று நாட்களுக்கு ஒரு பயணத்திற்கு அழைத்துச் சென்றார்கள், வானிலை உண்மையில் பனியுடன் இருந்தது. நான் பனியைப் பார்த்தது அதுவே முதல் முறை. பனிச்சறுக்கு விளையாடுவதும், பனியுடன் விளையாடுவதும் மிகவும் வேடிக்கையாக இருந்தது. அதன் பிறகு 5 நாட்கள் கணினி வகுப்புகளில் சேர்ந்தேன். வகுப்புகள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன, உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். பள்ளியில் என் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உன்னை காண காத்திருக்கிறேன் .

                                                                     இப்படிக்கு உன் நண்பன்

#SPJ3

Similar questions