India Languages, asked by mohanguru84513, 9 months ago

குடிக்கொடுத்த சுடர் கொடி என அழைத்தலுக்குரியவர் யார்?​

Answers

Answered by puravpatel13705
2

Answer:

வைணவ தலங்களில் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த திருவிழாக்களில் ஆடிப்பூரமும் ஒன்றாகும். பன்னிறு ஆழ்வார்களில் ஒருவராக போற்றப்படும் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடிப்பூரமாகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் நாள் ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது. இந்த விழா ஆண்டாள் அவதரித்த ஸ்ரீ வில்லிபுத்தூரில் 8 நாள் சீறும் சிறப்புமாக கொண்டாடப்படுகிறது. கொடியேற்றம் தொடங்கி தேரோட்டம் வரை தினம் ஒரு அலங்காரத்தில் ஆண்டாளும், ரங்க மன்னாரும் வாகனங்களில் நகர்வலம் வருவதைக் காண கண்கோடி வேண்டும்.

கருட சேவை

5 – ம் திருநாள் அன்று காலையில் பெரியாழ்வார் மங்கலாசாசனம் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பெருமாள், காட்டழகர், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் ஆகிய 5 பெருமாள் ஆலய உற்சவ மூர்த்திகளும் எழுந்தருளி ஆண்டாள் ரங்கமன்னாரை தரிசனம் செய்வர். அன்றைய தினம் இரவு விடிய விடிய கருடசேவை நடைபெறும். இதனைக் காண ஸ்ரீவில்லிபுத்தூரை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் கோவிலில் குவிந்திருப்பார்கள். மக்கள் கோலாட்டம், கும்மியாட்டம் ஆடி மகிழ்ச்சியுடன் ஆண்டாள், ரங்கமன்னாரை தரிசனம் செய்வர். ஆடிப்பூரம் தினத்தன்று ஊர் கூடி தேர் இழுக்க அதில் ஆண்டாள் ரங்கமன்னார் சமேதராக நான்கு மாட வீதிகளிலும் வலம் வரும் தேரினை பல்லாயிரக்கணக்கனோர் கண்டு தரிசிப்பார்கள்.

Similar questions