India Languages, asked by meganathangomathi74, 7 months ago

வெற்றிக்குத்தடையாக இருப்படெ எடெ என் பது பற்றி உன் நண் பனுக்குக் கடிதம் எழுதுக.

Answers

Answered by manimozhigopi30
0

Answer:

தொகுத்து எழுதவும்

Explanation:

இன்று எந்த துறையாக இருந்தாலும் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை அதிகம். வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவு. இதற்கு முழுத்திறமையையும் வெளிக் கொண்டுவருவதற்கு நீடிக்கும் தயக்கமே முக்கியக் காரணம் என்றார் மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் முதன்மை செயலர் வெ. இறையன்பு.

புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில் அதன் தலைவர் குரு. தனசேகரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவிகளுக்கு பட்டம் வழங்கி அவர் மேலும் பேசியது:

இன்றைய சூழலில் மனிதர்கள் இயந்திரத்தைவிட வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றனர். அனைவருக்கும் வாய்ப்புக்கிடைக்கும். அதைச்சரியாகப் பயன்படுத்தும் சிலரே வெற்றி பெறுகின்றனர். உலகின் பழைய கண்டுப்பிடிப்புகள் எல்லாம் 90 சதவீதம் எதிர்பாராமல் நடந்த நிகழ்வுதான். மேலும் அப்போதைய கண்டுபிடிப்புகள் வெளி உலகுக்கு தெரிய நீண்ட நாட்கள் ஆகும். ஆனால் இன்று அடுத்தநொடியே உலகெங்கும் தெரிந்துவிடுகிறது. எனினும் கண்டுபிடிப்பதற்கு வெகுநாட்கள் ஆகிறது. இன்று எந்த துறையாக இருந்தாலும் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை அதிகம். வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவு. இதற்கு முழுத்திறமையையும் வெளிக் கொண்டுவருவதற்கு நீடிக்கும் தயக்கமே முக்கியக் காரணம் என்றார்.

இதில் கடந்த ஆண்டு பல்கலைக்கழக தரவரிசையில் 39 ஆவது இடம் பிடித்த மாணவி என். வாசுகி, 44 ஆவது இடம்பிடித்த எம். அகிலா ஆகியோருக்கு பரிசுத்தொகையுடன் சான்றிதழும் வழங்கப்பட்டது.

விழாவுக்கு செயலர் வீ. வைத்தியநாதன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கே.ஆர். குணசேகரன், கே. ரெங்கசாமி, அ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் சரவண. திலகவதி தொடக்கவுரையாற்றினார்.

Similar questions