பழுதுபட்ட மின் கம்பிகளை சரி செய்து அறிவிக்கப்படத மின்வெட்டு மின் அழுத்த ஏற்ற இறக்கத்தை சரிசெய்ய வேண்டி கடிதம
Answers
Explanation:
மின்சார வயரிங் பிழைகள் வீட்டு உரிமையாளர்களுக்கு பெரிய சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும், இது சீர்செய்யப்படாமலும், தொடர்ந்து பராமரிக்கப்படாமலும் இருந்தால் அதிக சேதம் மற்றும் செலவுக்கு வழிவகுக்கும். பல - அதிகமாக இல்லாவிட்டால் - தவறான கம்பிகளை சரிசெய்யத் தவறியதால் வீட்டுத் தீ ஏற்படுகிறது. சேதமடைந்த மின் வயரிங் காரணமாக கிட்டத்தட்ட 500 அமெரிக்கர்கள் இறக்கின்றனர், மேலும் 2,500 க்கும் குறைவானவர்கள் வீட்டு தீ விபத்தில் காயமடைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வயரிங் அமைப்புகளில் சரியான கவனிப்பு மற்றும் சோதனைகளை பராமரிப்பது மிகவும் முக்கியம். இது சொத்து இழப்பைத் தடுக்க உதவும் மற்றும் மோசமான சந்தர்ப்பங்களில் - வாழ்க்கை!
Explanation:
அனுப்புநர்
கண்மணி,
புளியங்குடி நகராட்சி,
மதுரை – 625 008.
பெறுநர்
முதன்மை பொறியாளர்,
மின்வாரிய அலுவலகம்,
புளியங்குடி நகராட்சி,
மதுரை – 625 008.
ஐயா,
பொருள்: அறிவிக்கப்படாத மின்வெட்டு மின்னழுத்த ஏற்ற இறக்கத்தைச்
சரி செய்தல் – தொடர்பாக.
வணக்கம், எங்கள் தெரு புளியங்குடி நகராட்சியில் உள்ளது. இங்கு 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குழந்தைகள் முதல் அரசு அலுவலர்கள் வரை, இச்சாலை வழியே தான் நகரின் பிரதான சாலைக்குச் செல்ல வேண்டும். இப்பகுதியில் ஒரு நாளைக்கு நான்கு, ஐந்து முறை மின்வெட்டு ஏற்படுகிறது. மின்னழுத்த ஏற்ற இறக்கமும் ஏற்படுகிறது.
இவ்வீதியில் 28 மின்கம்பங்கள் உள்ளன. பாதிக்கு மேற்பட்ட கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் பழுதுபட்டு இருக்கின்றன. மின் விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் வீதியில் விபத்துகள் ஏற்படுகின்றன. இருட்டைப் பயன்படுத்தி வழிப்பறி கொள்ளைகளும், திருட்டு நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.
பலமுறை முறையிட்டும் நகராட்சி நிர்வாகம் போதிய அக்கறை செலுத்தவில்லை. எங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி மின்விளக்கு வசதி ஏற்படுத்தித் தருமாறு பணிவோடு வேண்டுகிறோம்.
நன்றி,
இடம்: மதுரை,
தேதி: 08.04.2019
இங்ஙனம்,
கண்ம ணி.
உறைமேல் முகவரி
முதன்மை பொறியாளர்,
மின்வாரிய அலுவலகம்,
புளியங்குடி நகராட்சி,
மதுரை – 625 008.