India Languages, asked by anandakannan, 7 months ago

இருபொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக மழலை பேசும் ___ அழகு ,தமிழ் எனது ___ ஆகும் ​

Answers

Answered by Anonymous
10

Answer:

மழலை பேசும் மொழிஅழகு ,தமிழ் எனது மொழி ஆகும்

இது கிட்டத்தட்ட சரியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.....

Thank my answer

Pls mark as BRAINLIESTS ANSWER

and FOLLOW ME...

Have a great day mate....

Answered by ravilaccs
0

Answer:

மொழி

Explanation:

  • மழலை பேசும் மொழி அழகு ,தமிழ் எனது மொழி ஆகும் ​
  • கல் தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ் மொழி என்று கூறும் போது நம் இதயத்தில் பரவசமுண்டாகிறது.
  • மனித குலம் பேச ஆரம்பித்ததே பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்தான் என்று மனிதவியலார் கூறுகின்றனர்.
  • கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன் மனிதன் தோன்றியிருக்க முடியாது.மனிதனே தோன்றாதபோது மொழி ஏது? ஆனாலும் தமிழ் மொழி மூத்த மொழி என்று கூறும் சிறப்பு வாக்கியம் நம்மை மகிழ்ச்சியடையச்செய்வதும் உண்மை.
  • இலக்கியம் என்பது தனிமனித அனுபவத்தை சக மனிதர்களின் அனுபவமாக மாற்ற உதவுகிறது.இந்த அனுபவப்பகிர்வு என்பதற்கு அடிப்படை மொழி.மொழியின்றி இலக்கியம் இல்லை. மனிதன் தன் தகவல் தொடர்புக்கு கொண்டதுதான் பேச்சு மொழி (verbal language).தகவலை மொழியால் மட்டும் பரிமாறிகொள்ள முடியாத போது, அதற்கு மாற்றாக அல்லாமல், அனுசரணையாக வந்ததுதான் ஒவிய மொழி(language of Drawing) ஒவியம் கூட ஒவியனின் திறமை திறமையின்மையைப் பொறுத்து தகவல்களை கூடுதலாகவோ குறைவாகவோ வெளிப்படுத்தும்.
  • இந்த இடத்தை இட்டு நிரப்ப வந்ததுதான் புகைப்பட மொழி.(language of Photography) இதிலும் கூட குறை உண்டு. இதில் சலனம் இருப்பதில்லை.தான் பார்த்ததை பார்த்தபடியே தன் சக மனிதனுக்கு தெரியப்படுத்த மனிதன் விரும்பினான்.அதனையும் தனதாக்கிக் கொண்டான்.அப்போது கிடைத்தது தான் திரைப்படம்(language of Cinematography) இவை தகவல் தொடர்பை பரட்சிகரமாக்கி உள்ளன.
  • இருந்தாலும் மொழி என்றாலென்ன? என்ற கெள்விக்கு இவைவிடையாவதில்லை.நம் வீட்டில் குழந்தை ஒசையை எழுப்பி விளையடுகிறது .அர்த்தமற்ற அந்த மழலை ஓசை நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. வெளியே கொண்டு செல்கிறோம்.ஓசையை எழுப்பி விளையாடுகிறது. அது ஏதோ சொல்வது போலவும்,அதர்கு அர்த்தமிருப்பது போலவும் எதிர்ப்படும் நண்பரிடத்தில் மொழிபெயர்த்துச் சொல்கிறோம். ரயிலைக் காட்டுகிறோம்.பிரும்மாண்டமான ஒசையோடு செல்லும் ரயிலை முதலில் பரவசத்தோடும் பின்னர் அதிர்வோடும், பயத்தோடும் குழந்தை பார்க்கிறது. "ஐ..ரயில்..ரயில்" என்று நாம் உச்சரித்தாலும் குழந்தை ஓசையை மட்டுமே எழுப்புகிறது. மறுபடியும் பார்த்தாலும் அது பாட்டிற்கு ஓசையை எழுப்புகிறது.ரயில் என்பது பற்றிய அறிவு நிலையை எட்டிவிட்டதாக நம் நினைக்கிறோம்.அதற்கு அந்த நிலை உருவாகிவிட்டதா என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை.இதுவே பெசும் திறன் கொண்ட இரண்டு அல்லது மூன்று வயதுக் குழந்தையாக இருந்தால் என்ன செய்யும். ரயில் என்று நாம் சொன்னவுடன் அதுவும் ரயில் என்று சொல்லும். ரயிலை எங்கு பார்த்தாலும் ரயில் என்று கத்தும்.அதாவது ரயில் என்ற அறிவு நிலை அதற்கு ஏற்பட்டுள்ளதை அடையாளப்படுத்தும்.
  • மொழி என்பது மனிதனின் அறிவு நிலைப்பட்டுள்ளதை அடையாளப் படுத்துகிறது. அதே போன்று அறிவு நிலையின் மூலம் மொழியும் அடையாளப்படுகிறது.
  • மனிதன் அவன் வாழும் பகுதியின் புவியியல்,வானிலை ஆகியவை அவன் வாழ்க்கைமுறையை நிர்ணயிக்கிறது.அதன்படி அவன் தன்னுடைய பழக்கவழக்கங்கள் பண்பாடு ஆகியவற்றை நிர்ணயித்துக்கோள்கிறான்.மொழியும் இதே தளத்தில் அவனால் கைக்கொள்ளப்படுகிறது.
Similar questions