India Languages, asked by anjalin, 7 months ago

உ‌ற்‌றில வா‌ய் ஒ‌லி கொ‌ள்ளு‌ம் செ‌வியென ஒது‌கி‌ன்றா‌ய் இட‌ஞ்சு‌ட்டி‌ப் பொரு‌ள் ‌விள‌க்குக.

Answers

Answered by ashauthiras
0

Answer:

கேள்விச் சுவை அறியார் இருப்பதும் இல்லாததும் ஒன்றுதான் என்னும் குறட்பா.

செவியால் கேட்டறியும் சுவைகளை உணராது, வாயால் நுகரும் இன்பத்தையறியும் மக்கள் செத்தால் என்ன? இருந்தால் என்ன என்பது பாடலின் பொருள்.

கேள்விச் சுவையற்றோரை மாக்கள் என்றும் அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்றும் வள்ளுவரைக் கூறவைப்பது எது?

செவியிற் சுவையுணரா என்ற தொடர்க்கு 'கேள்விச்சுவை தெரியாத' என்பது பொருள்.

வாயுணர்வு என்பது 'வாயால் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வு' என்று பொருள்படும்.

மாக்கள் என்ற சொல் மன உணர்ச்சி இல்லாதவரைக் குறிப்பது; விலங்குப் பண்பு கொண்ட மக்கள் என்பது பொருள்.

அவியினும் என்பது அழிந்தாலும் என்ற பொருள் தரும்.

கல்லாதவனை விலங்கு என்றார் (குறள் 410) முன்பு; இங்கு கேள்வியைப் பற்றி உணராதவனை மாக்கள் என்று கூறி அவன் இருப்பதும் இல்லாததும் ஒன்றுதான் என இன்னும் மிகையாக வசை பாடுகிறார் வள்ளுவர்.

மாக்கள் இயல்பு என்ன? அவை நாளும் உண்ணும்; உறங்கும்; உறவுகொள்ளும். அவ்வளவுதான். அதற்குமேல் அவற்றிற்குச் சுவை ஒன்றும் தெரியாது. சொற்சுவை, பொருட்சுவை, இசைச்சுவை என்ற செவிக்கும் உள்ளத்திற்கும் இன்பம்தரும் ஒன்றையும் அவை அறியா. உணவால் வயிறு நிரப்பும் நாக்குச் சுவை ஒன்றையே எண்ணும். செவியுணவாகிய கேள்விச் சுவைகளை நுகரப் பயிலாமல் வெறும் வாயுணவின் ருசிகளை மட்டும் நுகர்ந்து, வீணே உண்டு கழிக்கும் மாக்கள் இங்கு உயிருடன் இருந்தால் என்ன? அவை செத்து மடிந்தால் என்ன? இரண்டும் ஒன்றுதான். இவ்வாறு செவியின் சுவை உணரா மாந்தரை இக்குறள் இகழ்ந்துரைக்கிறது.

கேள்விச் சுவையற்றோரை மாக்கள் என்றும் அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்றும் வள்ளுவரைச் சினம் கொண்டு கூறவைப்பது எது?

முதல் வாசிப்பில் கேள்விச் சுவை மனிதனுக்கு அவ்வளவு தேவையா என்று படிப்போரைத் திகைக்க வைக்கும் மொழி கொண்டது இப்பாடல்.

முன்னர் செவிக்கு உணவு இல்லாதபோது சிறுது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று உண்ணுவதை இனியநடையில் கூறிய வள்ளுவர் இங்கு வெறுமனே உண்டு உறங்கும் மக்களை விலங்குகள் என்று வசைபாடி அவ்வாயுணர்வின் மாக்கள் இருந்தும் என்ன பயன் என வெறுப்பும் சலிப்பும் கொண்ட நடையில் கடுமையாகத் திட்டுகிறார்.

குறளில் வேறு சில இடங்களிலும் அவர் சினப் பார்வை கொண்டு மக்களைப் பேய், பூமிக்குப் பாரம், நடைபிணம் என்றும் கூறியுள்ளார். மக்களை மாண்புறுத்தும் நோக்கம் மட்டுமே அறநெறியாளரான வள்ளுவர்க்கு உண்டு. அதனால் சிலவேளைகளில் சொல்லின் கனபரிமானம் மிகுந்து அதில் இனியது இன்னாது என்று பாராமல், நல்விளைவு ஏற்படுத்தவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் கடுஞ்சொற்களை ஆள்கிறார். வள்ளுவரின் இன்னா நடையைத் திருந்த முயலாத மக்களைப் பண்படுத்தும் நோக்கில் ஆளப்பட்டதாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

அறிவுள்ள மக்களாலே உலகம் நிறைந்திருக்க வேண்டும் என்று விரும்புவர் வள்ளுவர். அறிவு பெற கேள்வி ஒரு சிறந்த வாயிலாக உள்ளது. மிகக் கடினமின்றி கிடைக்கும் கேள்விச் செல்வம் பெற முயலாமல் வீணே இரைதேடி அலையும் மனிதரை அவர் வெறுக்கிறார்.

அறுசுவை உணர்ந்து அனுபவித்து உண்பது குற்றமில்லை. ஆனால் செவி உணவை நாடாமல், வாயுணர்வினை மட்டுமே உணவாக எண்ணும் மக்களை அவர் கீழாகப் பார்ப்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

செவியின் சுவை தெரியாமல் விலங்குகளைப் போல வாயின் சுவை மட்டுமே அவர்களுக்குத் தெரிவதால் இக் கூட்டத்தினை மாக்கள் என்று சாடுகிறார் வள்ளுவர். கேள்விஅறிவு பெறகூட வாய்ப்பற்றவர்கள் உண்டு என்பதை அறிந்தவர்தான் அவர். ஆனாலும் எப்படியாகிலும் கேள்விச்சுவையை அவர்களும் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று சொல்ல வருபவர், கேள்விச்சுவை என்ற ஒன்றைத் தெரியாமல், அதனால் கிடைக்கின்ற இன்பங்களை உணராமல், நாக்குக்கு கிடைக்கற சுவையை மட்டுமே எப்பொழுதும் நினைத்துகொண்டு வயிற்றை நிரப்பும் மனிதர்கள் செத்தால்தான் என்ன என்று கேட்கிறார் இப்பெரியார்.

செவியால் கேட்டறியும் சுவைகளை உணராத வாயால் நுகரும் இன்பத்தையறியும் மக்கள் செத்தால் என்ன? இருந்தால் என்ன? என்பது இக்குறட்கருத்து.

Explanation:

Answered by steffiaspinno
0

உ‌ற்‌றில வா‌ய் ஒ‌லி கொ‌ள்ளு‌ம் செ‌வியென ஒது‌கி‌ன்றா‌ய்

இட‌ம்

  • த‌மி‌ழி‌ல் உ‌ள்ள ஐ‌ம்பெரு‌ங்கா‌ப்‌பிய‌‌ங்க‌ளி‌ல் ஒ‌ன்றான ‌நீலகே‌சி எ‌ன்ற நூ‌லி‌ல் மொ‌க்கல‌ன் எ‌ன்ற பு‌த்த‌த்துற‌வியுட‌ன் ‌நீலகே‌சி வாத‌ம் செ‌ய்யு‌ம் போது உ‌ற்‌றில வா‌ய் ஒ‌லி கொ‌ள்ளு‌ம் செ‌வியென ஒது‌கி‌ன்றா‌ய் எ‌ன்ற தொட‌ர் வரு‌ம்.

பொரு‌ள்  

  • காதுக‌ள் ஒ‌‌‌லி‌யினை கவரு‌ம் எ‌ன்‌கிறா‌ய்

‌விள‌க்க‌ம்  

  • பு‌த்த‌த்துற‌வியே ‌நீ‌ங்க‌ள் காதுக‌ள் ஒ‌லி‌யினை கவரு‌ம் எ‌ன்று கூ‌று‌கி‌றீ‌ர்‌கள்.
  • ஆனா‌ல் உ‌ண்மை‌யி‌ல் ஒ‌லி‌யினை காதுகளா‌ல் கவர இயலாது.
  • ஒ‌லி ம‌ற்று‌ம் ஒ‌ளி ஆ‌கிய இர‌ண்‌டு‌‌ம் ஒரே நேர‌த்‌தி‌ல் தோ‌‌ன்‌றினாலு‌‌ம், அவை இர‌ண்டையு‌ம் நா‌ம் ஒரே நேர‌த்‌தி‌ல் உண‌ர்வ‌தி‌ல்லை.
  • ஒ‌ளியை‌த் தா‌ன் மு‌த‌லி‌ல் உண‌ர்‌கிறோ‌ம்.
  • அத‌ன் ‌பிறகே ஒ‌லியை‌க் கே‌ட்‌‌கிறோ‌ம்.
  • ஒ‌லிதா‌ன் செ‌வி‌யினை வ‌‌ந்தடை‌கிறது.
  • செ‌‌வி ஒ‌லி‌யினை அடை‌வ‌தி‌ல்லை.
Similar questions