பாரதிதாசன் ஒரு புரட்சிக்கவி என்பதை உதாரன் பாத்திரம் வாயிலாக மெய்ப்பிக்க
Answers
Answered by
0
which language is this i can't understand write in english
Answered by
12
பாரதிதாசன் ஒரு புரட்சிக்கவி
உதாரன்
- அமைச்சரால் பார்வையற்றவனாக அமுதவல்லியிடம் கூறப்பட்ட உதாரனும், உதாரனிடம் தொழுநோயாளி என கூறப்பட்ட அழுதவல்லியும் இறுதியில் காதலராக மாறினர்.
- இதனால் இறுதியில் இருவரும் மரணத் தண்டனை விதிக்கப்பட்டு கொலைக்களம் புகுந்தனர்.
- அப்போது உதாரன் மக்களிடம் பேசியதாக பாரதிதாசன் தன் புரட்சிச் சொற்களை பயன்படுத்தினார்.
உழைப்பாளர்கள்
- உழைப்பாளர்கள் தங்களின் தோள் வலிமையின் காரணமாக உழவுக்கு பயன்படாத பாழ் நிலத்தினைக்கூட பண்படுத்திப் புதுநிலமாக மாற்றி உழவுக்கு பயன்படுத்தினர்.
- அழகு நகர்களையும், சிற்றூர்களையும் உருவாக்கினர்.
- வரப்பினை எடுத்து வயல்களையும், ஆற்றைத் தேக்கி நீர்வளத்தினை பெருக்கியும், உழவில் ஈடுபட்டு உணவுப் பொருட்களையும் உற்பத்தி செய்தும் வந்தனர்.
புரட்சி
- மக்களுக்காக அரசா? அல்லது அரசிற்காக மக்களா?.
- ஒரு மனிதன் (அரசன்) தேவைக்கே இந்த தேசம் உண்டு எனில் அந்த தேசம் ஒழிதல் நன்றாம் என கூறி மக்கள் புரட்சிக்கு வித்திட்டார் உதாரன் வழியாக பாரதிதாசன்.
தாய்மொழிப்பற்று
- நான் அறிந்த என் தாய்மொழியான தமிழ் மொழியே என் மரணத்திற்கு காரணமாக விளைந்தது என அதை இகழ வேண்டாம்.
- மாசு இல்லாத உயர்ந்த தமிழ் மொழியினை உயிர் என எண்ணிப் போற்றுங்கள் எனக் மக்களிடம் உதாரன் கூறினான்.
- இவ்வாறு தன் பாடல்கள் மூலம் உண்மையான புரட்சிக்கவியாக பாரதிதாசன் விளங்கினார்.
Similar questions