நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?
Answers
Answered by
27
நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து
கம்பராமாயணம்
- வால்மீகி வடமொழியில் எழுதியதை தழுவி தமிழில் கம்பர் எழுதிய காப்பியமே கம்பராமாயணம் ஆகும்.
- இது பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.
சவரி
- இராமனிடம் மிகுதியான அன்பையும், பக்தியையும் உடையவளாக சவரி திகழ்ந்தாள்.
- சீதையை தேடி இராமன் அலைந்த போது இராமனை சுக்ரீவனுடன் நட்புக் கொள்ளுமாறு செய்தவள் சவரி ஆகும்.
- இராமனைக் கண்டதால் தன் பொய்யான உலகப்பற்று அழிந்தது எனவும், அளவற்ற காலம் தான் மேற்கொண்டு இருந்த தவம் பலித்து பிறவி ஒழிந்தது எனவும் கூறி நிலையாமை குறித்தக் கருத்தை சவரி வெளிப்படுத்தினாள்.
Similar questions