India Languages, asked by anjalin, 6 months ago

காப்பியம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

Answers

Answered by rakzhana01
4

Answer:

முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.

முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பெரியபுராணம் மட்டுமே தமிழ்நாட்டுக் கதைகளை மூலக் கருவாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. மற்றவைகள் சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் தழுவல்களாகவோ அல்லது தமிழாக்கங்களாகவோ உள்ளன

Answered by steffiaspinno
6

காப்பியம்

  • காப்பியம் என்னும் சொல் ஆனது காப்பு + இயம் எனப் பிரிந்து மரபைக் காப்பது, இயம்புவது, வெளிப்படுத்துவது, மொழியைச் சிதையாமல் காப்பது என்றெல்லாம் பொருள் தருகிறது.
  • கா‌ப்‌பிய‌ம் எ‌ன்ற சொ‌ல் ஆனது வடமொ‌ழி‌யி‌ல் கா‌விய‌ம் எனவு‌ம், ஆ‌ங்‌கில‌‌த்‌தி‌ல் EPIC எனவு‌ம் கு‌றி‌ப்‌பிட‌ப்படு‌கிறது.
  • கா‌ப்‌பிய‌ம் பெரு‌ங்கா‌ப்‌பிய‌ம், ‌சிறு கா‌‌ப்‌பிய‌ம் என இரு வகை‌ப்படு‌ம்.
  • பொரு‌ள் தொகை ‌நிக‌‌ண்டு, ‌திரு‌த்த‌ணிகை உலா முத‌லிய நூ‌ல்க‌ள் பெரு‌ங்கா‌ப்‌பிய‌ங்க‌ள் ஐ‌ந்து என‌க் கு‌றி‌ப்‌பி‌ட்டு அத‌ன் பெய‌ர்களையு‌ம் கு‌றி‌ப்‌பி‌ட்டு உ‌ள்ளன.
  • சில‌‌ப்ப‌திகார‌ம், ம‌ணிமேகலை, ‌சீவக ‌சி‌ந்தாம‌ணி, வளையாப‌தி, கு‌ண்டலகே‌சி ஆ‌கிய ஐ‌ந்து‌ம் ஐ‌ம்பெரு‌ங்கா‌ப்‌பிய‌ங்க‌ள் ஆகு‌ம்.
  • சூளாம‌ணி, ‌நீலகே‌சி, உதயண குமார கா‌விய‌ம், யசோதர கா‌விய‌ம், நாககுமார கா‌விய‌ம் முத‌லியன ஐ‌ஞ்‌சிறு கா‌ப்‌பிய‌ங்க‌ள் ஆகு‌ம்.
Similar questions