பெருந்தேர் – புணர்ச்சி விதி கூறுக.
Answers
Answered by
15
பெருந்தேர்
புணர்ச்சி
- நிலைமொழியின் இறுதி எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் இணைவதை புணர்ச்சி ஆகும்.
- இரு எழுத்துகளும் புணர்ச்சியில் ஈடுபடும் போது, புதிய எழுத்துக்கள் தோன்றல், எழுத்து திரிதல், எழுத்து நீக்கப்படுதல் அல்லது எந்த வித மாற்றமும் ஏற்படாமல் இருத்தல் முதலியன நிகழும்.
பெருந்தேர்
- பெருந்தேர் என்ற சொல்லினை பிரித்தால் பெருமை + தேர் என வரும்.
- ஈறுபோதல் (ஈற்று எழுத்து கெட்டு போதல்) என்ற விதியின் அடிப்படையில் பெருமை என்ற சொல்லின் இறுதியில் உள்ள மை என்ற எழுத்து நீங்கி பெரு + தேர் என புணர்ந்தது.
- பின்னர் இனமிகல் என்ற விதியின் அடிப்படையில் வருமொழியின் முதலில் உள்ள த் என்ற எழுத்துக்கு இணையான மெல்லினமான ந் சேர்ந்து பெரு + ந் + தேர் - பெருந்தேர் என புணர்ந்தது.
Similar questions