India Languages, asked by anjalin, 7 months ago

எடுத்துக்காட்டு உவமையணியை விளக்கிக் கீழ்க்காணும் குறளுக்கு இவ்வணியைப் பொருத்தி எழுதுக. துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுஉண்பார் கள்உண் பவ‌ர்

Answers

Answered by steffiaspinno
2

எடுத்துக்காட்டு உவமை அணி

அ‌ணி ‌விள‌க்க‌ம்  

  • உவமான‌த்‌தினை வேறாக கூ‌றி,  உவமேய‌‌த்‌தினை வேறாக கூ‌றி, உவமை ம‌ற்று‌ம் உவமே‌ய‌த்‌தி‌ற்கு இடையே ஒ‌ப்புமை‌யினை கூறு‌ம் உவம உருபு கொடு‌க்காம‌ல் கூறுவது எடுத்துக்காட்டு உவமை அணி என அழை‌க்க‌‌ப்படு‌கிறது.  

(எ.கா)  

  • துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்
  • நஞ்சுஉண்பார் கள்உண் பவ‌ர்.

பொரு‌ள்

  • உற‌ங்‌கியவ‌ர் அ‌றிவு செய‌ல்படாததா‌ல் இ‌ற‌‌ந்தவரை‌ போல கருத‌ப்படு‌கிறா‌ர்.
  • அது போலவே க‌ள் உ‌ண்பவரு‌ம் அ‌றிவு செய‌ல்படாததா‌ல் ந‌ஞ்சு ‌உ‌ண்பவராகவே கருத‌ப்படுவா‌ர்.  

‌விள‌க்க‌ம்

  • குற‌ளி‌ல் உ‌ற‌ங்‌‌‌கியவ‌ர் இற‌ந்தவராக கருத‌ப்படுவது உவமை, க‌ள் உ‌ண்பவ‌ர் ந‌ஞ்சுபவராக கருத‌ப்படு‌வது உவமேய‌ம்.
  • ஆனா‌ல் உவம உருபு இ‌ல்லாததா‌ல் இது எடு‌த்து‌க்கா‌ட்டு உவமை அணி ஆகு‌ம்.  
Similar questions