நெடுங்கிளை மற்றும் குறுங்கிளை வேறுபடுத்துக.
Answers
Answer:
நெடுங்கிள்ளி, முதலாம் கரிகால் சோழனுக்குப் பின் பட்டத்துக்கு வந்த சோழ அரசனாவான். இவன் கி.பி முதலாம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சிபீடமேறி இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. நெடுங்கிள்ளி முற்காலச் சோழர் வரிசையில் ஒருவன். இவன் ஆட்சிபீடம் ஏறியபோது சோழ நாடு நல்ல நிலையிலேயே இருந்ததெனினும், நெடுங்கிள்ளிக்கும், நலங்கிள்ளி என்னும் இன்னொரு சோழனுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டி அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக சோழ நாடு சீரழிந்ததாக சங்க இலக்கியங்கள் மூலம் தெரிய வருகின்றது.
கோவூர் கிழார் என்னும் புலவர் பாடிய 44 ஆம், 45 ஆம் புறநானூற்றுப் பாடல்கள், இவ்விரு சோழர்களுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி மற்றும் அதனால் மக்களும், விலங்குகளும்கூடப் படும் துன்பங்கள் பற்றிய செய்திகளைத் தருகிறது. அது மட்டுமன்றி இரு சோழர்களுக்கும் இடித்துரைத்து ஆலோசனை கூறும் தொனியையும் இப் பாடல்களிலே காண முடிகின்றது.
Mark me brainliest
நெடுங்கிளை மற்றும் குறுங்கிளை ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடுகள்
நெடுங்கிளை
- தண்டின் பிரதான அடிமரத்தில் நெடுங்கிளைகள் காணப்படுகின்றன.
- நெடுங்கிளையில் நுனி மொட்டுகள் வரம்பின்றி அதிகமாக வளர்கின்றன.
- நெடுங்கிளைகள் நுனியினை நோக்கிச் செல்லும் போது படிப்படியாக வளர்ச்சி குறைந்து தாவரத்திற்கு கூம்பினை போன்ற அமைப்பினைத் தருகின்றன.
- நெடுங்கிளைகளில் செதில் இலைகள் மட்டுமே காணப்படுகின்றன.
குறுங்கிளை
- குறுங்கிளைகளில் நுனி மொட்டுகள் காணப்படுவது கிடையாது.
- இதன் காரணமாக இவை வரம்பினை கொண்ட வளர்ச்சியினை மட்டும் கொண்டு உள்ளன.
- செதில் இலைகளின் கோணத்தில் தோன்றுகின்ற குறுங்கிளைகள் செதில் இலைகளும், தழை இலைகளும் கொண்டு உள்ளன.
- இதுவே நெடுங்கிளை மற்றும் குறுங்கிளை ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடுகள் ஆகும்.