நிரல்நிறைப் பொருள்கோள் சான்று தருக
Answers
Answered by
3
Explanation:
நிரல்நிறை அணி சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப் படியே பொருள் கொள்ளும். அதாவது சில சொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து, அச்சொற்களோடு தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறைமாறாமல் சொல்வது நிரல்நிறை அணி ஆகும்.
◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼
(எ.கா.)
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
--(திருக்குறள், 45)
◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼
இக்குறள் அன்பு, அறன் என்பவற்றை வரிசையாக நிறுத்தி அவற்றோடு தொடர்புடைய பண்பு, பயன் என்பவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்து, பொருள் கொள்ளுமாறு அமைக்கப் பெற்றுள்ளது. இதுவே நிரல்நிறை அணி ஆகும்.
நிரல்நிறை அணியின் வகைகள்
நிரல்நிறை அணி இரண்டு வகைப்படும்.
⚘நேர் நிரல்நிறை அணி
⚘எதிர் நிரல்நிறை
Attachments:

Similar questions