இந்தியாவில் மகா அலெக்சாண்டரின் படையெடுப்பின் தாக்கங்களைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
பேரரசன் அலெக்சாந்தர் அல்லது மகா அலெக்சாண்டர் (Alexander the Great, கிரேக்கம்: Αλέξανδρος ο Μέγας அல்லது Μέγας Aλέξανδρος,[1] Megas Alexandros; சூலை 20, கிமு 356 - சூன் 10/ 11, கிமு 323), கிரேக்கத்தின்[2][3] பகுதியான மக்கெடோனின் பேரரசர் (கிமு 336–323). மக்கெடோனின் மூன்றாம் அலெக்சாண்டர் எனவும் இவர் அழைக்கப்படுகிறார். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவர் ஈடுபட்ட எந்தப் போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவரது காலத்தில் பண்டைய கிரேக்கர்களுக்குத் தெரிந்த உலகின் பெரும் பகுதியைக் கைப்பற்றி ஆண்டார். இவர் பண்டைய அண்மை கிழக்கு, பண்டைய எகிப்து மற்றும் பாரசீகப் பகுதிகளை ஆண்ட அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் டேரியசை வென்றார்.
Answered by
0
இந்தியாவில் மகா அலெக்சாண்டரின் படையெடுப்பின் தாக்கங்கள்
- அலெக்சாண்டரின் படையெடுப்பு ஆனது இந்திய துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் கிரேக்க சத்ரப்புகள் அல்லது மாகாணங்கள் அமைய வழி கோலியது.
- இந்தியாவில் மேற்குலக மக்களின் வணிகத்திற்கு வழிகளை ஏற்படுத்தியது.
- கிரேக்க வணிகர்களும், கைவினைஞர்களும் இந்தியா வந்தனர்.
- வணிகத் தொடர்பு அதிகரித்த பிறகு இந்தியாவின் வடமேற்கில் பல கிரேக்க குடியிருப்புகள் தோன்றின.
- சில முக்கியமான கிரேக்க குடியிருப்புகள் காபுல் அருகிலிருந்த அலெக்சாண்டிரியா, பாகிஸ்தானின் பெஷாவருக்கு அருகே உள்ள பூகிஃபெலா, சிந்துவில் இருந்த அலெக்சாண்டிரியா முதலியன ஆகும்.
- கிரேக்கர்கள் இந்தியாவை பற்றி எழுதிய பதிவுகள் சற்று மிகையானவையாகவும், இந்தியா பற்றி மிக அரிய தகவல்களை தருபவையாகவும் விளங்கின.
Similar questions