India Languages, asked by sivagamilingeswaran, 6 months ago

இந்திய விண்வெளித் துறை பற்றிய செய்திகளை விவரிக்க.​

Answers

Answered by dhanyasreeananth66
51

இந்திய விண்வெளித் துறை பற்றிய செய்திகளை விவரிக்க.

Answer:

இது, இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். இதன் தலைமையகம், இந்தியாவில், பெங்களூருவில் நீயூஸல் சாலையில் ‘அன்தரீஷ் பவன்’ என்ற பெயரில் உள்ளது. இதன் முதன்மை விண்வெளி நிலையம் சதீஸ்தவன் விண்வெளிமையம். இதன் தலைவராக திரு கே. சிவன், 14.1.2018 அன்று முதல் பொறுப்பேற்று செயலாற்றி வருகிறார். இவர், நாகர்கோவில், வல்லங் குமாரவிளை கிராமத்தில் பிறந்தவர். எம்.ஐ.டி யில் சேர்ந்து எம்.இ., பட்டம் பெற்று விக்ரம் சாராபாய் நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளி தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும். இந்நிறுவனம், 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ‘ஆரியப்பட்டா’ அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது.

 

இதற்குக் காரணமானவர் விக்ரம் சாராபாய் ஆவார். 1980 இல் இந்தியாவில் கட்டமைக்கப்பெற்ற ஏவுதளம் SLV3 மூலமாக முதல் செயற்கைக் கோள் ‘ரோகினி’ ஏவப்பட்டது. இந்நிறுவனத்தின் சாதனையாக 2008 ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதற்பயணமாக “சந்திராயன்-1” ஏவப்பட்டது.

1957 ஆம் ஆண்டு முதலே ரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைக் கோள்களை ஏவியிருக்கின்றன. அவற்றை எல்லாம் இராணுவத்துக்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். வல்லரசு நாடுகள் அவற்றின் ஆற்றலைக் காண்பிக்கவே, இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தின. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நம்நாட்டு அறிவியலாளர் டாக்டர் விக்ரம் சாராபாய் இந்தத் தொழில்நுட்பம் மக்களுக்கு எவ்வாறு பயன்படும் என்றே சிந்தித்தார்.

இந்திய ஏவுகணை நாயகன் அப்துல் கலாம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக்கோள் திட்ட இயக்குநர், வளர்மதி, மங்கள்யான் செயற்கைக்கோள் திட்ட இயக்குநர் அருணன் சுப்பையா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

Answered by tharundev4
30

Explanation:

இது, இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். இதன் தலைமையகம், இந்தியாவில், பெங்களூருவில் நீயூஸல் சாலையில் ‘அன்தரீஷ் பவன்’ என்ற பெயரில் உள்ளது. இதன் முதன்மை விண்வெளி நிலையம் சதீஸ்தவன் விண்வெளிமையம். இதன் தலைவராக திரு கே. சிவன், 14.1.2018 அன்று முதல் பொறுப்பேற்று செயலாற்றி வருகிறார். இவர், நாகர்கோவில், வல்லங் குமாரவிளை கிராமத்தில் பிறந்தவர். எம்.ஐ.டி யில் சேர்ந்து எம்.இ., பட்டம் பெற்று விக்ரம் சாராபாய் நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளி தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும். இந்நிறுவனம், 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ‘ஆரியப்பட்டா’ அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது.

இதற்குக் காரணமானவர் விக்ரம் சாராபாய் ஆவார். 1980 இல் இந்தியாவில் கட்டமைக்கப்பெற்ற ஏவுதளம் SLV3 மூலமாக முதல் செயற்கைக் கோள் ‘ரோகினி’ ஏவப்பட்டது. இந்நிறுவனத்தின் சாதனையாக 2008 ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதற்பயணமாக “சந்திராயன்-1” ஏவப்பட்டது.

1957 ஆம் ஆண்டு முதலே ரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைக் கோள்களை ஏவியிருக்கின்றன. அவற்றை எல்லாம் இராணுவத்துக்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். வல்லரசு நாடுகள் அவற்றின் ஆற்றலைக் காண்பிக்கவே, இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தின. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நம்நாட்டு அறிவியலாளர் டாக்டர் விக்ரம் சாராபாய் இந்தத் தொழில்நுட்பம் மக்களுக்கு எவ்வாறு பயன்படும் என்றே சிந்தித்தார்.

இந்திய ஏவுகணை நாயகன் அப்துல் கலாம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக்கோள் திட்ட இயக்குநர், வளர்மதி, மங்கள்யான் செயற்கைக்கோள் திட்ட இயக்குநர் அருணன் சுப்பையா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

Similar questions