History, asked by anjalin, 5 months ago

சரியான கூற்றினைத் தேர்ந்தெடு அ) தனது தொடக்கக்கால வாழ்வில் சைவராக இருந்த அப்பர் தனது தமக்கையால் சைவ மதத்திலிருந்து சமண மதத்திற்கு மாறினார். ஆ) சூஃபி இயக்கத்தவர் கடவுளை அழகின் உச்சமாகக் கருதினர் இ) இராம பக்தியை முன்னிலைப்படுத்தி வங்காள வைணவர்கள் இந்து மதத்தைச் சீர்திருத்த முயன்றனர். ஈ) பௌத்த மத நூல்களில் ரவிதாஸின் பக்திப்பாடல்கள் இணைக்கப்பட்டு‌ள்ளன.

Answers

Answered by Anonymous
0

Answer:

correct answer is d. ..............

Answered by steffiaspinno
0

சூஃபி இயக்கத்தவர் கடவுளை அழகின் உச்சமாகக் கருதினர்

  • அ‌ப்ப‌ர் ஆர‌‌ம்ப கால‌த்‌தி‌ல் சமண சமய‌த்‌தினை சா‌ர்‌ந்தவராக இரு‌ந்தா‌ர்.
  • ‌சமண மதத்தி‌ல் இருந்த போது அப்பர் த‌ர்ம சேன‌ர் என அழை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.
  • சி‌றிது கால‌‌த்‌தி‌ற்கு ‌பிறகு த‌ன் தம‌க்கையான ‌திலகவ‌தியா‌ரி‌ன் முய‌ற்‌சி‌யினா‌ல் அ‌ப்ப‌ர் சமண சம‌ய‌த்‌தி‌லிரு‌ந்து சைவ‌ மதத்திற்கு மாறினார்.
  • சூபிகள் அனைத்துக்கும் மேலான அழகின் உச்சமாக இறைவ‌ன் ‌திக‌ழ்வதாக கரு‌தின‌ர்.
  • சூ‌பிக‌ள் இறைவனை மஸ்க் எனவு‌ம், த‌ங்களை ஆசிக் எனவு‌ம் கரு‌தின‌ர்.
  • சீக்கியரின் மதப் பாடல்களில்  ரவிதா‌ஸ் இய‌ற்‌றிய பக்திப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
  • இந்து மதத்தைச் சீர்திருத்து‌ம் முய‌ற்‌சி‌யி‌ல் வங்காள வைணவர்கள் ஈடுபட‌வி‌ல்லை.
  • மாறாக வங்காள வைணவர்கள் ம‌க்களை ‌கிரு‌‌ஷ்ணரி‌ன்  ‌‌மீது ப‌க்‌தி கொ‌ள்ளுமாறு வ‌ற்புறு‌த்‌தின‌ர்.  
Similar questions