சிவாஜியின் இராணுவ அமைப்பு அவரது வெற்றிக்கு எவ்வாறு வழி வகுத்தது?
Answers
Answered by
0
லோனாவாலா அருகே உள்ள மலைப்பாதையான அம்பார் கிண்டில், சிவாஜி உம்பர்கிந்த் போரில் ஷாஹிஸ்டேகானின் நன்கு அறியப்பட்ட இராணுவ அதிகாரியான கர்னல் கர்தலாப் கானின் 20,000 பேர் கொண்ட இராணுவத்தை பதுக்கி வைத்து தோற்கடித்தார். இந்த வெற்றிக்கு பஹிர்ஜியின் உளவுத்துறை சேகரிப்பு காரணம்.
Answered by
0
சிவாஜியின் இராணுவ அமைப்பு அவரது வெற்றிக்கு வழிவகுத்த விதம்
சிவாஜியின் இராணுவ அமைப்பு
- சிவாஜி நிலையான இராணுவ அமைப்பினை பெற்று இருந்தார்.
- சிவாஜி ஜாகீர்களை வழங்குதல் மற்றும் மரபு வழியாகச் செய்யப்படும் நியமனங்களை ஊக்கப்படுத்தவில்லை.
- படை வீரர்களுக்கு வீடு மற்றும் முறையான ஊதியம் வழங்கப்பட்டது.
- பாரம்பரிய போர் முறையிலும் பயிற்சிகளை பெற்ற சிவாஜியின் இராணுவ படை வீரர்கள் கொரில்லா போர் முறையில் சிறந்து விளங்கினர்.
- சிவாஜியின் இராணுவ அமைப்பில் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, ஆயுதப்படை என நான்கு பிரிவுகள் இருந்தன.
- காலாட் படை ஆனது ரெஜிமெண்டுகள், பிரிகேடுகள் என பிரிக்கப்பட்டன.
- குதிரைப் படையின் தலைமைத்தளபதியாக சாரிநௌபத் செயல்புரிந்தார்.
- இத்தகைய வலிமையான இராணுவம் சிவாஜிக்கு பல வெற்றிகளை தேடிதந்தது.
Similar questions