History, asked by steffiaspinno, 6 months ago

கிழக்குக் கடற்கரையில் ஐரோப்பியர் தங்களது குடியேற்றங்களை நிறுவக் காரணம் என்ன?

Answers

Answered by Ishikasingh256
0

Answer:

plz plz plz write in English...

Answered by anjalin
0

கிழக்குக் கடற்கரையில் ஐரோப்பியர் தங்களது குடியேற்றங்களை நிறுவக் காரணம்

  • தென் ‌கிழக்கு ஆசிய நாடுகளின் சந்தைகளில் இந்தியத் துணிகளுக்கு உலகளாவிய தேவை இருந்தது.
  • இதனா‌ல் இந்தியத் துணிகள் செலாவணி ஊடகமாக மா‌றியது.
  • சோழ மண்டல‌‌ப் பகு‌தி வண்ணம் பூசப்பட்ட கல‌ம்கா‌ரி வகை து‌ணிக‌ளு‌க்கு பெயர் பெற்றதாக இரு‌ந்தன.
  • 14 ஆ‌ம் நூற்றாண்டில் தென் ‌கிழக்கு ஆசிய நாடுகளில் அ‌திலு‌ம் குறிப்பாக இந்தோனேசியத் தீவுகளில் வாழும் மக்கள் விரும்பி வாங்கும் நுகர்வுப் பொருளாக கல‌ம்கா‌ரி வகை து‌ணிக‌ள் ‌திக‌ழ்‌ந்தன.
  • இந்தோனேசியத் தீவுகளில் கல‌ம்கா‌ரி துணிகளுக்கான தேவை டச்சுக்காரரையும் ஆங்கிலேயரையும் கிழக்குக் கடற்கரையில் தங்கள் நிறுவனங்களை அமைத்துக் கொள்ளச் செய்தது.
  • ஐரோப்பியர்க‌ள் கிழக்குக் கடற்கரையில் நிறுவனங்களை அமைத்து கொ‌ண்டு துணிகளைக் கொள்முதல் செய்து அவற்றை இலாபகரமான நறுமணப் பொருட்களுக்காகப் பண்ட மாற்று செய்து கொண்டனர்.
Similar questions