History, asked by steffiaspinno, 6 months ago

வீரபாண்டிய கட்டபொம்மன் தொடர்பான பிரச்சனைகளை தவறாகக் கையாண்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆங்கிலேய ஆட்சியர் __________ஆவார். (அ) W.C. ஜாக்சன் (ஆ) A. பானர்மேன் (இ) S.R. லூஹிங்டன் (ஈ) P.A. ஆக்னியூ

Answers

Answered by rajoraneeraj1
0

W.C. ஜாக்சன்

hope it helps u..!

Answered by anjalin
0

W.C. ஜாக்சன்

  • இராமநாதபுரத்தில் நடந்த மோதலுக்குக் காரணம் தன்னிடம் ஜாக்சன் நடந்துகொண்ட முறையே என  பாஞ்சாலங்குறிச்சிக்குத் திரும்பிய கட்டபொம்மன் சென்னை கவுன்சிலுக்குக் கடிதம் அனுப்பினார்.
  • இதற்கிடை‌யி‌ல் கம்பெனி நிர்வாகத்திடம் கட்டபொம்மன் சரணடைந்தால் நேர்மையான விசாரணை நடைபெறும் என்றும் இதற்கு உடன்படாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் ஆளுநர் எட்வர்டு கிளைவ் அவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
  • அதனை ஏ‌ற்ற கட்ட பொம்மன் கம்பெனி விசாரணைக் குழுவிடம் நேரில் சென்று விளக்கம் அளித்தார்.
  • கம்பெனி விசாரணைக் குழு ஆனது கலகக் குற்றச் சாட்டுகளிலிருந்து கட்டபொம்மனை விடுவி‌த்தது.
  • மேலு‌ம் க‌ட்டபொ‌ம்ம‌னிட‌ம் தவறாக நடந்துகொண்ட ஜாக்சனை க‌ண்டி‌த்தது.
  • இறுதியில் ஜாக்சன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
  • புதிய கலெக்டராக லூஷிங்டன் நியமிக்கப்பட்டார்.
Similar questions