Political Science, asked by RajaSudalaikkani, 6 months ago

”ராஜஸ்தான், பீகார், ம.பி, உ.பில எல்லாம் கூட தான் நீட் தேர்வு எழுதறாங்க. அவங்க யாரும் தமிழர்களை மாதிரி புலம்பறதே இல்லையே. தகுதி இல்லைன்னா வேற ஏதாவது படிக்க வேண்டியது தானே ?”

“நீங்க சொன்ன எல்லா ஊர்லயும் மாநில கல்வி திட்டங்களை விட ஒன்றியத்தின் நேரடி கல்வி திட்டமான சி.பி.எஸ்.ஈயும், நவோதயா பள்ளிக்கூடங்களும் தான் அதிகம். அதனால் தான் சர்வ சிக்‌ஷா அபியான் திட்ட ஒதுக்கீட்டில் வடக்கு, மேற்கு, கிழக்கில் மாநிலங்களுக்கு பள்ளிகளை அதிகமாக்க நிதி ஒதுக்கப்படுகிறது. மேலும், நீங்கள் சொல்லும் மாநிலங்களில் பாண்டேவும், திவாரியும், மேத்தாவும், அகர்வாலும், சதுர்வேதியும் தான் மருத்துவம் படிக்க ஸ்பெஷல் கோச்சிங்கிற்கு கோட்டாவினை நோக்கி ரயிலேறுகிறார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.ஈ, நவோதயா பள்ளிகளை விட மாநில கல்வியின் பரவலாக்கம் அதிகம். அதை விட முக்கியமானது இங்கே ராமசாமி, குப்புசாமி, முனுசாமி, முனியன், கருப்பனின் குழந்தைகளும் மருத்துவராக கூடிய சூழல் இதற்கு முன்னால் இருந்தது. இங்கே எல்லா தரப்பு மக்களின் குழந்தைகளும் மருத்துவராக தங்களை தயார் படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.

ஆகவே, வடக்கின் போக்கையும், தமிழ்நாட்டையும் ஒப்பிடுவதே அபத்தம். அப்படியே ஒப்பீட்டாலும், 3 வருடங்களுக்கு முன்பு வரை பல ஆயிரக்கணக்கான மருத்துவர்களை உருவாக்கிய மாநிலம் இப்போது எதிர்த்து குரலெழுப்புகிறது என்றால், அதற்கு காரணம் அவர்களுக்கு தகுதியில்லை என்பதால் அல்ல. மாறாக, அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்காகவே திணிக்கப்பட்ட ஒரு தேர்வினை நீக்கவேண்டும் என்பதற்காக.

இந்த சப்பைக்கட்டெல்லாம் வேற எங்கயாவது போய் சொல்லுங்க, இந்தியாவின் முன்னோடி மருத்துவரான மரு. முத்துலட்சுமியை உருவாக்கிய மாநிலம் இது. எங்களுக்கு மருத்துவம் பற்றியும், மருத்துவ கல்வி பற்றியும் கற்று கொடுக்க எந்தவிதமான அருகதையும், தகுதியும் ஒன்றியத்திற்கு கிடையாது

வக்கிலாத நாய்கள் வாலை சுருட்டி கொண்டு இருங்கள். உங்களுக்கு வாய் மட்டும் தான் நீளும். தேவை என்றால், எங்களுக்கு கைகளும் நீளும்.”

#BanNEET
#RejectNEET
#TNAgainstNEET​

Answers

Answered by Andrew32
2

Answer:

நானும் தமிழ் தான்

தமிழன் ட

நண்பா

please mark me as brainliest friend

Similar questions