பொருந்தாத இணையைக் கண்டறிக அ) புதுமைப்பித்தன் - ந.பிச்சமூர்த்தி ஆ) கந்தவர்வன் - மேலாண்மை பொன்னுசாமி இ) ராஜம்கிருஷ்ணன் - கோமகள் ஈ) கி. இராஜநாராயணன் - ஆதவன் தீட்சண்யா
Answers
Answered by
0
கி. இராஜநாராயணன் - ஆதவன் தீட்சண்யா
புதுமைப்பித்தன் - ந.பிச்சமூர்த்தி
- தொடக்கத்திலேயே தமிழ் நவீன இலக்கியங்களை செழுமைப்படுத்தியவர் புதுமைப்பித்தன் ஆவார்.
- இவரின் சமகால எழுத்தாளர்கள் ந.பிச்சமூர்த்தி, மெளனி, பி.எஸ்.ராமைய்யா, கு.ப.ராஜகோபாலன் மற்றும் சிதம்பர சுப்பிரமணியன் ஆகியோர் ஆவர்.
கந்தவர்வன் - மேலாண்மை பொன்னுசாமி
- ஜெயகாந்தனுக்கு பிறகு எழுதிய முற்போக்கு படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர்கள் கந்தர்வன், ச.தமிழ்ச்செல்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, தனுஷ்கோடி ராமசாமி, வேல.ராமமூர்த்தி, சோலை சுந்தர பெருமாள், தேனி சீருடையான் ஆகியோர் ஆவர்.
ராஜம்கிருஷ்ணன் - கோமகள்
- மூன்றாம் தலைமுறையினை சார்ந்த பெண் எழுத்தாளர்கள் ஆர். சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், கோமகள், லட்சுமி, அநுத்தம்மா ஆகியோர் ஆவர்.
கி. இராஜநாராயணன் - ஆதவன் தீட்சண்யா
- கி. இராஜநாராயணன் மூன்றாம் தலைமுறையையும், ஆதவன் தீட்சண்யா ஐந்தாம் தலைமுறையையும் சார்ந்த எழுத்தாளர்கள் ஆவர்.
Similar questions