மூவகை மொழிகளை விளக்குகள்
Answers
Answer:
தனிமொழி
தொடர்மொழி
பொதுமொழி
தனிமொழி தொகு
ஒருசொல் தனித்து நின்று பொருளை உணர்த்துவது, தனிமொழி.
எ.கா: வா, கண், செய்தான்
தொடர்மொழி தொகு
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்துவந்து பொருளை உணர்த்துவது தொடர்மொழி.
எ.கா: படம் பார்த்தான்.
பொதுமொழி தொகு
ஒருசொல் தனித்து நின்று ஒருபொருளையும், அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து, தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது, பொதுமொழி எனப்படும்.
எ.கா: அந்தமான், பலகை, வைகை
‘அந்தமான்’ என்பது ஒரு தீவையும், அச்சொல்லே அந்த+மான் எனப் பிரிந்து நின்று அந்த மான் (விலங்கு) என வேறு பொருளையும் தருகின்றது.
Explanation:
ஓர் எழுத்து, தனியாகவோ பல எழுத்துகள் தொடர்ந்தோ பொருள் தருவது சொல் எனப்படும். பதம், மொழி, கிளவி என்பன ஒருபொருள் தரும் பலசொற்கள்.
மூவகை மொழிகள்:
ஒரு எழுத்து தனியாகவோ அல்லது பல எழுத்துக்கள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.
தமிழ்ச் சொற்களை தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி என மூவகையாகப் பிரிவுபடுத்துவர்.
தனிமொழி:
- ஒருசொல் தனித்து நின்று தன் பொருளை உணர்த்தி வருவது தனிமொழி எனப்படும்.
- இது பெயர், வினை, இடை, உரி என்ற நால்வகைச் சொற்களிலும் அமையும்.
- இதனை ஒருமொழி எனவும் வழங்குவர்.
- நிலம், முருகன்-பெயர்த் தனிமொழி
- நட, போ-வினைத் தனிமொழி
- கொல்-இடைத் தனிமொழி
- சால-உரித் தனிமொழி
தொடர்மொழி:
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வந்து பொருளை உணர்த்துவது தொடர்மொழி எனப்படும்.
- எ.கா: படம் பார்த்தான், அவன் எங்கள் வீட்டிற்கு வந்தான்.
- தொடர்மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு பொருளைத் தரும்.
பொதுமொழி:
- ஒரு சொல் தனித்து நின்று ஒருபொருளையும், அச்சொல்லே பிரிந்து நின்று மற்றொரு பொருளையும் தருவது பொதுமொழி எனப்படும்.
- தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவதால்,இது பொதுமொழி எனப்படுகிறது.
- எ.கா: அந்தமான், பலகை,
- அந்தமான்-ஒரு தீவு
- அந்த மான்- ஒரு வகை விலங்கு
#SPJ3