Computer Science, asked by nsbala222, 8 months ago

கலிப்பாவிற்க்குரிய ஓசை​

Answers

Answered by Anonymous
8

Answer:

ஆசிரியப்பா என்பது, தமிழின் யாப்பியலில் சொல்லப்படும் பாவகைகளுள் ஒன்று. இது அகவலோசையைக் கொண்டு அமைவது. ஆசிரியத்தளை எனப்படும் தளை வகையே இப் பாவுக்கு உரியது. எனினும் வேறு தளைகளும் இடையிடையே வருவது உண்டு.

இவ்வகைப் பாக்கள் மூன்று அடிகள் தொடக்கம் எத்தனை அடிகள் கொண்டதாகவும் இருக்கலாம். அடிகளின் எண்ணிக்கைக்கு மேல் எல்லை கிடையாது. ஆசிரியப்பாவின் அடிகள் நான்கு சீர்களைக் கொண்ட அளவடியாகவோ, மூன்று சீர்கள் கொண்ட சிந்தடியாகவோ, இரண்டு சீர்களைக் கொண்ட குறளடியாகவோ அமையலாம். ஐந்து சீர்களைக் கொண்ட அடிகளும் இடம்பெறலாம். எனினும் முதல் அடியும் இறுதி அடியும் அளவடிகளாக இருத்தல் வேண்டும்.

ஆசிரியப்பாவின் இறுதி அசை ஏ, ஓ, என், ஈ, ஆ, ஆய், அய் என்னும் அசைகளுள் ஒன்றாக இருத்தல் வேண்டும் என்ற விதியும் உண்டு.

ஆசிரியப்பாவுக்குரியவை தொகு

சீர் தொகு

ஆசிரிய உரிச்சீர் எனப்படும் ஈரசைச் சீர்கள் மிகுந்துவரும்.பிறசீர்களும் கலந்துவரும். ஆனால் நிரைநடுவாகிய வஞ்சியுரிசீர்கள் (கருவிளங்கனி, கூவிளங்கனி) வராது. தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்ற வாய்பாட்டால் அமையும் நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரையாகிய நான்கு சீரும் ஆசிரிய உரிச்சீருக்கு உதாரணங்கள் ஆகும்.

தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய், என்ற வாய்பாட்டால் அமையப்பெறும் நான்கு சீர்களும் வெண்பா உரிச்சீருக்கு உதாரணங்கள் ஆகும். ஆசிரிய உரிச்சீருடன் வெண்பா உரிச்சீரும் ஆசிரியப்பாவில் வரலாம்.

தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி என்ற வாய்பாட்டால் அமையப்பெறும் நான்கு சீர்களும் வஞ்சிச் சீர்களுக்கு உதாரணங்கள் ஆகும். இவை ஆசிரியப்பாவில் வர முடியாது.[1]

தளை தொகு

ஆசிரியப்பாவுக்குச் சிறப்பாக உரிய நேரொன்றாசிரியத் தளை (மாமுன்நேர்), நிரையொன்றாசிரியத் தளை (விளமுன் நிரை) மிகுந்து வரும். பிற தளைகளும் கலந்து வரும்.

சீர்கள் ஒன்றுடனொன்று கூடும் கூட்டத்திற்குத் தளை என்று பெயர். நேரொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை எனத் தளைகள் ஏழு வகைப்படும். மாமுன் நிரையும், விளமுன் நேரும் வருவது இயற்சீர் வெண்டளை. காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை. இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் வெண்பாவுக்குரியவை.

காய்முன் நிரை வருதல் கலித்தளை. கனிமுன் நிரை வருதல் ஒன்றிய வஞ்சித்தளை. கனிமுன் நேர் வருதல் ஒன்றாத வஞ்சித் தளை. ஆசிரியப்பாவில் இருவகையான வஞ்சித்தளைகள் தவிர்ந்த ஏனைய ஐந்து தளைகளும் வரும்

Answered by Anonymous
1

Answer:

మీ భాష తెలియదు నిజంగా క్షమించండి మీరు ప్రశ్నించిన స్పామింగ్ కోసం క్షమించండి శుభోదయం అద్భుతమైన రోజు.

Similar questions