India Languages, asked by tamilselvi72, 2 months ago

ஆக்கம் யாரிடம் வழி கேட்டு செல்லும்​

Answers

Answered by sahumanoj0331
5

Answer:

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்கம் உடையான் உழை

(அதிகாரம்:ஊக்கமுடைமை குறள் எண்:594)

பொழிப்பு (மு வரதராசன்): சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.

மணக்குடவர் உரை: அசைவில்லாத ஊக்கமுடையான்மாட்டு ஆக்கம், தானே வழி கேட்டுச் செல்லும்.

நினைத்ததனாலே ஊக்கமுண்டாமோ- என்றார்க்கு இது கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: அசைவு இலா ஊக்கம் உடையான் உழை - அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டு; ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் - பொருள் தானே வழி வினவிக் கொண்டு செல்லும்.

(அசைவு இன்மை - இடுக்கண் முதலியவற்றான் தளராமை. வழி வினவிச் சென்று சார்வார் போலத்தானே சென்று சாரும் என்பார், 'அதர்வினாய்ச் செல்லும்' என்றார். எய்திநின்ற பொருளினும் அதற்குக் காரணமாய ஊக்கம் சிறந்தது என்பது, இவை நான்கு பாட்டானும் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: சோர்வில்லாத ஊக்கம் உடையவர்களிடத்துச் செல்வம் தானே வழிகேட்டுக் கொண்டு சென்றடையும்.

பொருள்கோள் வரிஅமைப்பு:

அசைவிலா ஊக்கம் உடையான் உழை ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்.

பதவுரை:

ஆக்கம்-செல்வம்; அதர்-வழி; வினாய்-வினவிக்கொண்டு; செல்லும்-போகும்; அசைவு-சோம்புதல்; இலா-இல்லாத; ஊக்கம்-மனவெழுச்சி; உடையான்-உடையவன்; உழை-இடத்தில்.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:

மணக்குடவர்: ஆக்கம், தானே வழி கேட்டுச் செல்லும்;

பரிப்பெருமாள்: ஆக்கம், தானே வழி கேட்டுச் செல்லும்;

பரிதி: இலட்சுமி வழிகேட்டு வருவள்;

காலிங்கர்: ஒருவனுக்கு இருமைக்கும் உரிய ஆக்கமானது தானே வழி தேடிச் சென்று எய்தும்;

காலிங்கர் குறிப்புரை: அதர் என்பது வழி என்றது.

பரிமேலழகர்: பொருள் தானே வழி வினவிக் கொண்டு செல்லும்.

பரிமேலழகர் குறிப்புரை: வழி வினவிச் சென்று சார்வார் போலத்தானே சென்று சாரும் என்பார், 'அதர்வினாய்ச் செல்லும்' என்றார்.

Answered by Anonymous
5

Answer:

சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும் .

Similar questions