India Languages, asked by navyamn47, 2 days ago

இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக.​

Answers

Answered by Anonymous
49

Explanation:

அனுப்புநர்

சா. சுந்தர்,

த/பெ. ஆ. சங்கர்

34, குறிஞ்சி நகர்,

ஈரோடு – 638 001.

பெறுநர்

உயர்திரு. வட்டாட்சியர் அவர்கள்,

வட்டாட்சியர் அலுவலகம்,

ஈரோடு.

மதிப்புக்குரிய அய்யா,

பொருள் : இருப்பிடச் சான்றிதழ் வேண்டுதல் சார்பாக.

வணக்கம்.

ஈரோடு, அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கின்றேன். 34, குறிஞ்சி நகர், ஈரோடு – 638 001 என்ற முகவரியில் பத்து ஆண்டுகளாக நாங்கள் வசித்து வருகின்றோம். அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இருப்பிடச் சான்றிதழ் தேவைப்படுகின்றது. இத்துடன் குடும்ப அட்டை நகலும் ஆதார் அட்டை நகலும் இணைத்துள்ளேன். ஆகவே, எனக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி!

இடம் : ஈரோடு

நாள் : 25.06.2020

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

சா. சுந்தர்.

உறைமேல் முகவரி:

பெறுநர்

உயர்திரு. வட்டாட்சியர் அவர்கள்,

வட்டாட்சியர் அலுவலகம்,

ஈரோடு.

please mark as brilliant answer

Answered by bharathrajliftserve
15

Answer:

விடுநர் :

கவிதா ம.

எண். 15, முத்தம்மன் கோவில் தெரு,

சாய்நாதபுரம்,

வேலூர்.

பெறுநர் :

உயர்திரு வட்டாட்சியர் அவர்கள்,

வட்டாட்சியர் அலுவலகம்,

வேலூர்.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : இருப்பிடச் சான்று வேண்டி.

வணக்கம். நான் மேலே குறிப்பிட்ட முகவரியில் பத்து ஆண்டுகளாகக் குடும்பத்துடன் இருக்கிறேன். நான் படிக்கும் பள்ளியில் என் இருப்பிடம் பற்றிய விவரத்தைக் கேட்கின்றனர். ஆதலால் நான் இம்முகவரியில்தான் வசிக்கிறேன் என்பதற்கான இருப்பிடச் சான்றிதழ் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

இணைப்பு :

1. ‘குடும்ப அட்டை நகல்

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள

கவிதா ம.

உறைமேல் முகவரி

அஞ்சல் தலை

பெறுநர்:

உயர்திரு வட்டாட்சியர் அலுவலகம்,

வட்டாட்சியர் அலுவலகம்,

வேலூர்.

Explanation:

pls mark as brianlist

Similar questions