Accountancy, asked by arulprabha23, 10 days ago

சங்கநாதம் கவிதை மூலம் பாரதிதாசன் கூறுவன வற்றை​

Answers

Answered by vaishnavisenthil
0

Answer:

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்

விண்ணோடும் உடுக்களோடும்

மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன்

பிறந்தோம் நாங்கள், ஆண்மைச்

சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோர்க்கு

ஞாபகம் செய் முழங்கு சங்கே!

சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்

தீராதி தீரரென்று ஊது சங்கே!

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்

சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்

தோள் எங்கள் வெற்றித் தோள்கள்!

கங்கையைப் போல் காவிரி போல் கருத்துக்கள்

ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்!

வெங்குருதி தனில் கமழ்ந்து வீரஞ்செய்கின்ற

தமிழ் எங்கள் மூச்சாம்!

– பாவேந்தர் பாரதிதாசன்

நானும் தமிழ் தான்

Similar questions