India Languages, asked by rohinimuhil2008, 5 days ago

பொருத்தமான நிறுத்தக் குறியீடுகள்: பாரதியார் எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தார் இவரது இயற்பெயர் சுப்பிரமணியம் இவர் பதினொரு வயதில் தமது திறமையால் பாரதி என்ற பட்டத்தை பெற்ற மேலும் இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் இதழாளர் சமூக சீர்திருத்தவாதி விடுதலைப் போராட்ட வீரர் என பல்திறன் பெற்ற வித்தகர் அவர்​

Answers

Answered by presentmoment
0

பாரதியார் எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தார். இவரது இயற்பெய சுப்பிரமணியன் ஆகும். இவர் பதினோரு வயதில் தமது கவித்திறமையால் பாரதி என்ற பட்டத்தைப் பெற்றார். மேலும் இவர் ஒரு சிறந்த எழுத்தாளர், இதழாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர் எனப் பல்திறன் பெற்ற வித்தகர் ஆவார்.

Explanation:

  • சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார்.
  • இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். Wikipedia
  • பிறந்த தேதி: 11 டிசம்பர், 1882 பிறந்த இடம்: எட்டையபுரம்
  • இறந்த தேதி: 11 செப்டம்பர், 1921 இறந்த இடம்: ட்ரிப்ளிக்கானே, சென்னை.
  • பெற்றோர்: சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள் இலச்சுமி அம்மாள்.
  • இறப்பு: செப்டம்பர் 11, 1921 (அகவை 38); சென்னை,

Similar questions