World Languages, asked by lleeladharshini, 5 months ago

த‌‌ என்னும் எழுத்து‌ பிறக்கும்‌ இடம்​

Answers

Answered by dharamveerpra102
0

Answer:

1.3 எழுத்துகளின் பிறப்பு

ஆசிரியர் பயிற்சி மாணவர்களே! தமிழ் எழுத்துகளின் வகை, தொகை பற்றியெல்லாம் அறிந்துகொண்ட நீங்கள், எழுத்துகள் எவ்வாறு எங்குப் பிறக்கின்றன என்பதையும் அறிந்துகொள்ளுதல் வேண்டும்.

எழுத்துகள் பிறப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பவை ஒலியணுக்கள். உயிர் தங்கியுள்ள உடம்பின் உள்ளே எழுகின்ற காற்றானது, மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகியவற்றைப் பொருந்தி, உதடு, நாக்கு, பல், மேல்வாய் ஆகிய இவ்வுறுப்புகளின் முயற்சியால் வெவ்வேறு ஒலிகளாகப் பிறக்கின்றன. எழுத்துகளின் பிறப்பை இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

எழுத்துகள் தோன்றுகின்ற மார்பு, கழுத்து, தலை, மூக்கு முதலானவற்றை இடப்பிறப்பு எனவும் உதடு, நாக்கு, பல், மேல்வாய்(அண்ணம்) முதலான உறுப்புகளின் தொழில் வேறுபாட்டினால் ஒலிப்பதனை முயற்சிப் பிறப்பு எனவும் வழங்குவர்.

உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டும் முதல் எழுத்துகள் எனப்படும் என்பதை முன்னரே அறிந்தீர்கள். மெய்யெழுத்துகளை ஒலிக்கும்பொழுது வேறுபட்ட மூன்று ஒலிகளை நாம் கேட்கலாம். அவை வல்லின ஒலி, மெல்லின ஒலி, இடையின ஒலி ஆகியன. அவ்வொலிகள் வேறுபடுவதற்குக் காரணம், அவை பிறக்கும் இடங்கள் வேறுபடுவனவேயாகும்.

எழுத்துகளின் பிறப்பினை, நன்னூல் ஆசிரியர் பவணந்தியார் கூறியதைப் போலவே, மொழியியல் அறிஞர் ஒலிநூலுள் அடக்குவர். ஒலி எழுவதற்குக் காரணமான காற்று, நிலைபெறும் இடங்களைக் காற்றறைகள் எனவும், ஒலி எழுவதற்குத் துணைசெய்யும் உறுப்புகளை ஒலிப்பு முனைகள் எனவும் கூறுவர்.

Similar questions