வினையாலணையும் பெயர் - விளக்குக
Answers
Answered by
2
Answer:
வினையாலணையும் பெயர் என்பது தமிழில் உள்ள ஓர் இலக்கணத் தொடர். வினைமுற்றுகள் பெயராக மாறி நின்று மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முற்றுப்பெறுவது இது.
வந்தான் என்பது ஒரு வினைமுற்று.
வந்தான் சென்றான் என்னும்போது வந்தான் என்பது வினையாலணையும் பெயர். இதில் வந்தான் என்னும் வினைமுற்றோடு பெயர் அணைந்துகொண்டு வந்தவன் ஒருவனை உணர்த்துவதைக் காணலாம்.
இந்த வினையாலணையும் பெயர்
வந்தானைக் கண்டான்.
வந்தானால் சாய்ந்தான்
வந்தானுக்குக் கொடு
வந்தானிடமிருந்து போனான்
வந்தானது உயரம்
வந்தானிடம் கோல் உள்ளது
வந்தானே நில்
என்றெல்லாம் பிற வேற்றுமை உருபுகள் கொண்டும் வரும்.
Similar questions