சரியான கூற்றினைக் கண்டுபிடி 1. ஒவ்வொரு மன்சப்தாருக்கும் 10 முதல் 10,000 வரையிலான படைவீரர்களைக் கொண்டிருக்க வேண்டுமென்பதை ஜாட்டுகள் தீர்மானித்தனர். 2. ஷெர்ஷாவின் நாணய முறை, ஆங்கிலேயரின் நாணய முறைக்கு அடித்தளமிட்டது. 3. முகலாயருக்கும் ராணா பிரதாப் சிங்கிற்கும் இடையே நடைபெற்ற ஹால்டிகாட்ட போர் மிகக் கடுமையான இறுதிப் போர் ஆகும். 4. சீக்கியப் புனித நூலான “குரு கிரந்த சாகிப்” குரு அர்ஜுன் தேவால் தொகுக்கப்பட்டது.
Answers
Answered by
0
ஷெர்ஷாவின் நாணய முறை, ஆங்கிலேயரின் நாணய முறைக்கு அடித்தளமிட்டது
- மன்சப்தார் தகுதி ஆனது ஜாட், சவார் என இரு வகையாக பிரிக்கப்பட்டது.
- ஜாட் என்பது ஒவ்வொரு மன்சப்தாரும் பெறுகின்ற ராணுவ வீரர்களின் எண்ணிக்கையினை நிர்ணயம் செய்வது ஆகும்.
- அந்த எண்ணிக்கை 10 முதல் 10000 படை வீரர்கள் வரை ஆகும்.
- ஷெர்ஷாவின் நாணய முறை ஆனது முகலாயர் காலம் முழுவதும் அப்படியே பின்பற்றப்பட்டு ஆங்கிலேயர் காலத்து நாணய முறைக்கும் அடித்தளமாக அமைந்தது.
- 1576 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹால்டிகாட் போர் ஆனது முகலாயப் படைகளுக்கும் ராணா பிரதாப் சிங்குக்கும் இடையே நடைபெற்ற நேரடிப் போர் ஆகும்.
- ஷேக் பரித் என்ற இஸ்லாமிய மத குரு, நாமதேவர், கபீர், சைன், ரவிதாஸ் ஆகிய பக்தி இயக்கப் புலவர்களின் போதனைகளை உள்ளடக்கமாக கொண்டதாக சீக்கியரின் புனித நூலான குரு கிரந்த சாகிப் உள்ளது.
Answered by
0
Explanation:
All the answers are correct
Similar questions