Math, asked by priyadharshini7551, 7 months ago

இ) தெய்வ உருவங்கள்
குறுவினா
1. செப்புத் திருமேனிகள் பற்றிக் குறிப்பு வரைக
2. நடுகல் என்றால் என்ன?
3.
இசைத் தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்
4. கண்ணன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது
20
5.
இடிகுரல், பெருங்கடல் - இலக்கணக் குறிப்பும்​

Answers

Answered by velsadhana2011
2

Answer:

1. கோயில்களில் இடம் பெறும் சிற்பங்களில் செப்புத் திருமேனிகள் தனிச்சிறப்பு மிக்கவை. ஏனெனில் பிற சிற்பங்கள் கல்லில் செதுக்கப்படும் அல்லது சுதையில் உருவாக்கப்படும். ஆனால் செப்புத் திருமேனிகளோ ஐம்பொன்னில் வார்க்கப்படுகின்றன. ஐம்பொன்னில் செம்பு அதிக அளவில் இடம் பெறுவதால் இவை செப்புத் திருமேனிகள் என்றழைக்கப்படுகின்றன.

2.நடுகல் இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக் கல் ஆகும். இவற்றை "வீரக் கற்கள்" என்றும் கூறுவர். நினைவுக்கற்கள் எடுக்கும் வழக்கம் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கோ, ஒரு பிரதேசத்துக்கோ அல்லது தனிப்பட்ட பண்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கோ உரிய வழக்கம் அல்ல. உலகின் பல பகுதிகளிலும் பெருங்கற்காலம் முதலே இவ்வழக்கம் இருந்து வந்துள்ளது. இந்தியாவிலும் வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி நெடுங்காலமாகவே நடுகற்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. இறந்தவர் எவருக்குமே நடுகற்கள் எடுக்கப்படலாமாயினும், வீரச்சாவு அடைந்தவர்களுடைய நடுகற்களுக்கே பெருமதிப்புக் கொடுக்கப்பட்டு வந்தது. வீரர்களுக்காக எடுக்கப்படும் நினைவுக் கற்களை மக்கள் வணங்கி வந்தமை பற்றியும் பண்டைக்கால இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.

3. இசைத் தூண் என்பது, இசை எழுப்பும் வகையில் பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்ட கற்றூணைக் குறிக்கும். பெரும்பாலும் கோயில் மண்டபங்களின் ஒரு பகுதியாக அமைக்கப்படும் இசைத்தூண்கள் தமிழகத்தின் பல கோயில்களில் காணப்படுகின்றன. இசைத்தூண்கள் கட்டிடக்கலையின் ஒரு அம்சமாகவும் அமைவதால், பல்வேறு அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடியவையாக அமைகின்றன. தென்னிந்தியாவில் இசைத் தூண்கள் தமிழ்நாட்டிலும் அயல் மாநிலங்களிலும் காணப்படுகின்றன. எனினும், தமிழ்நாட்டில், குறிப்பாகப் பண்டைய பாண்டிய நாட்டைச் சார்ந்த பகுதிகளிலேயே கூடுதலாகக் காணப்படுகின்றன. அத்துடன் இப்பகுதியில் உள்ள இசைத் தூண்களே மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

ஹம்பி விட்டலர் கோயில் இசைத்தூண் மண்டபம்

தற்காலத்தில் இவ்வாறான இசைத் தூண்கள் பார்ப்பதற்கு ஆச்சரியம் தருவனவாகவும், அதனால், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அம்சங்களாகவும் மட்டுமே காணப்பட்டாலும், முற்காலத்தில் சில இசைத் தூண்கள் பூசை நேரங்களில் இசை எழுப்பப் பயன்பட்டன என்றும், வேறு சிலவற்றில் இசை மீட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

4.

இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க – வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

5.

இடி‌க்குர‌‌ல், பெரு‌ங்க‌ட‌ல் இல‌க்கண‌‌க் கு‌றி‌ப்பு தருக ;

இல‌க்கண‌ம் எ‌ன்பது ஒரு மொ‌‌ழி‌யினை தவறு இ‌ல்லா‌ம‌ல் க‌ற்க உதவு‌ம் ‌வி‌திமுறை ஆகு‌ம்.  அ‌ந்த ‌‌வி‌தி‌முறை‌க்கு உ‌ட்ப‌ட்டு தா‌ன் அ‌ந்த மொ‌ழிகளு‌ம் இய‌ங்கு‌ம்.  

உமமை‌த் தொகை  

தொகை எ‌ன்பது மறை‌ந்து வருத‌ல் (தொகு‌த்து வருத‌ல்) . அதாவது உவம உருபானது மறை‌ந்து வருவதாகு‌ம். இடி‌க்குர‌லானது இடி போ‌ன்ற குர‌ல் எ‌ன்பத‌ன் தொகையாகு‌ம். இ‌தி‌ல் போ‌ன்ற எ‌ன்ற உவம உருபு மறை‌ந்து வரு‌கிறது.  

இடி‌க்குர‌ல் = உவமை‌த்தொகை .

ப‌ண்புத்தாெகை

‌‌‌‌நிற‌ம், அளவு, கு‌ண‌ம், சுவை போ‌ன்ற ஏதேனு‌ம் ப‌ண்‌பினை‌க் கொ‌ண்டு‌ வரு‌ம்‌.

ப‌ண்பு‌த்தொகை‌‌யி‌ல் மை எ‌ன்ற ‌விகு‌தியு‌ம், ஆ‌கிய எ‌ன்ற உருபு‌ம் மறை‌ந்து வரு‌ம்‌.

பெரு‌ங்கட‌ல் = பெருமை + கட‌ல் .

Step-by-step explanation:

hope its helpful

Similar questions