1.வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை - இக்குறட்பாவிற்கு அலகிட்டு வாய்பாடு தருக.
Answers
Answer:
hello
Explanation:
Type Here
தேடு
அறத்துப்பால்
பொருட்பால்
காமத்துப்பால்
ta
தமிழ் (தமிழ்)
HOMEPAGEபகைமாட்சி
பகைமாட்சி
குறள் 861
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
மு.வரதராசனார் உரை:
தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.
பரிமேலழகர் உரை:
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக – தம்மின் வலியார்க்குப் பகையாய் எதிர்தலை ஒழிக; மெலியார்மேல் பகை ஓம்பா மேக – ஏனை மெலியார்க்குப் பகையாதலை ஒழியாது விரும்புக. (‘வலியார’ என்புழித் துணை வலியும் அடங்கலின், ‘மெலியார்’ என்புழித் துணை வலியின்மையும் கொள்ளப்படும். அத்துணைதான் படை பொருள் முதலிய வேற்றுமைத் துணையும், நல்லறிவுடைமை நீதிநூல்வழி ஒழுகல் முதலிய ஒற்றுமைத் துணையும் என இரண்டாம். அவ்விரண்டும் இல்லாரை வெல்வார்க்கு வலி தொலையாமையின் அவரோடு பகைத்தல் விதிக்கப்பட்டது. சிங்கநோக்காகிய இதனுள் பகை மாட்சி பொதுவகையால் கூறப்பட்டது.).