13. மரத்தின் கிளைகள் அதிகம்
உள்ளன
Answers
Answer:
மரம் என்பதை அளவிற் பெரிய பல்லாண்டுத் தாவரம் என வரைவிலக்கணம் கூறலாம். இது நிலத்தில் (ஒரு விதையிலிருந்து) தோன்றி, இடம் விட்டு இடம் தானே நகராது, நிலைத்து வளரக்கூடிய ஒரு நிலைத்திணை வகை ஆகும். இதற்கான அளவு குறித்த வரையறை எதுவும் கூறப்படாவிடினும், பொதுவாக முதிர்ந்த நிலையில் 4.5 மீட்டர் (15 அடி) உயரமும், ஒரு தனி அடிமரத்தில் தாங்கப்பட்ட கிளைகளையும் கொண்டிருக்கும். மரங்கள், இயற்கை நிலத்தோற்றத்தில் முக்கியமான அம்சமாக இருப்பதுடன் நிலத்தோற்றக்கலையில் ஒரு முக்கியமான கூறுமாகும். ஏனைய வகைகளைச் சேர்ந்த செடிகொடி போன்ற நிலத்திணை வகைகளை விட, மரங்கள் நீண்டகாலம் வாழக்கூடியவை. சிலவகை மரங்கள் 100 மீ. (300 அடி), உயரம் வரை வளரக்கூடியவை, சில ஈராயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலும் வாழக்கூடியவை. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள செம்மரம் என்னும் வகை இப்படிப்பட்டன. இதே போல தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகர பட்டினம் என்னும் ஊரில் கடற்கரை அருகில் அமைந்துள்ள ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட "பவோபாப் மரம்" இன்றும் ஆயிரம் ஆண்டுகளை கடந்து வாழ்ந்துகொண்டு இருக்கிறது.
மேப்பிள் மரம்
பவோபாப் மரம் தென்னாபிரிக்காவிலுள்ளது
கலிபோர்னியா மாநிலத்தில் வளரும் செம்மரம்.
இந்த மரம் தமிழர்கள் ஆதிகாலத்தில் கடல் வணிகத்தில் உலகின் முன்னோடிகளாக இருந்தனர் என்பதற்கு நல்ல உதாரணமாக கூறலாம்.
காரணம் தமிழர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கப்பல் வழி வணிகம் செய்ய போகும்போது இந்த மரத்தின் விதைகளை அங்கிருந்து எடுத்து வந்து இங்கு விதைத்து இருகின்றனர்.
I couldn't understand the question..but hope it helps you