மனிதர்களால் காற்று எவ்வாறு மாசடைகிறது 7 மாசை
கட்டுபடுத்துவது என்பதைப் பற்றி எழுதுக
Answers
Answer:
We use and burn plasics which is harmful to breathe
We spit everywhere
We use many vehicles which would lead to the global warming
The human waste in all the area in the remote villages will lead to cancers and other harmful diseases
Last but not the least, smoking the cigrates and throwing it down will without snatching it with legs,the smoke will spread to 1.5 kilometers in just 1 minute
Explanation:
HOPE THIS WOULD BE HELPFUL
MARK ME AS A BRAINLIST
Answer:
மனிதன் வாழ அடிப்படையானது காற்று. சுத்தமான காற்றை சுவாசிக்கத் தான் நாம் எல்லோரும் விரும்புவோம். ஆனால் நாம் சுவாசிப்பது சுத்தமான காற்றா? பெருகிவரும் வாகனங்கள், தொழிற்சாலைகள், எரிபொருள் பயன்பாடுகள் என இந்தியாவே தற்போது குப்பையாக மாறிக் கொண்டிருக்கிறது. அதுவும் காற்று மாசுபாட்டால் இந்தியர்களின் ஆயுட்காலமே குறைந்துக் கொண்டிருக்கிறது என்ற புள்ளிவிபரங்கள் நம்மை மேலும் அச்சுறுத்துகின்றன.
நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா என காற்று மாசுபாட்டால் ஏற்படக் கூடிய நோய்கள் ஏராளம். இவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அதுவும் பெரிதாக வெற்றி அடைவதில்லை. அரை கிலோமீட்டர் தொலைவுக்கே வண்டியை எடுத்துச் செல்லும் நாம் எப்படி மாசுபாட்டை குறைக்கப்போகிறோம். சீனா மற்றும் இந்தியாதான் அதிக அளவு மாசுபாடு உடைய நாடாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இதற்கு மக்கள் தொகை காரணமாக இருக்கலாம் ஆனால் மாசுபாட்டை குறைக்கவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
ஏனெனில் அதிகரிக்கும் மாசுபாட்டால் நம் தலைமுறை மட்டும் அல்ல எதிர்வரும் தலைமுறையையும் சேர்த்து பாதிக்கும். தற்போது பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்தமான காற்றை பணம் கொடுத்து வாங்கி சுவாசித்து கொண்டிருக்கிறார்கள் சீனர்கள். இனியும் நம் விழித்துக் கொள்ளவில்லையென்றால் நம் நாட்டிலும் சுத்தமான காற்றை பணம் கொடுத்து வாங்க வேண்டிய நாள் வரும்.
# காற்றில் இருக்கும் நுண்துகள்களைக் கொண்டே காற்றின் தரம் அளவிடப்படுகிறது.
# மத்திய கிழக்கு நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள், மேற்கு பசிபிக் நாடுகள்தான் அதிக மாசுபாடு அடைந்த நாடுகளாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
# 2015ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அரசு காற்றின் தரக் குறியீட்டை வெளியிட்டது. பொதுமக்களுக்கு நாள்தோறும் காற்றின் தரம் குறித்து அறிவிக்கவும் மாசுபாடு குறித்து தெரிவிப்பதற்கும் இந்த தரக் குறியீடு முறை தொடங்கப்பட்டது.
# வாகனங்கள் காற்று மாசுபாட்டிற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்தியாவில் வாகனங்கள் வெளியிடும் புகையால் 70 சதவீத காற்று மாசுபாடு ஏற்படுகிறது.
# 1951-ம் ஆண்டு இந்தியாவில் 30 லட்சம் வாகனங்கள் மட்டுமே இருந்தது. 2001ம் ஆண்டு தகவலின் படி 5.83 கோடி வாகனங்கள் இருந்தன. இது தற்போது மூன்று மடங்காக அதிகரித்திருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
# தனிநபர் வாகனங்கள் அதிகரிப்பதால் 2001-02ம் ஆண்டில் 75.7 சதவீதமாக இருந்த பொதுப் போக்குவரத்து பயன்பாடு 2030-31ம் ஆண்டில் 44.7 சதவீதமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
# ஒரு வருடத்தில் ஒரு வாகனத்திலிருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு 1.92 டன்
# இரு சக்கர வாகனத்தை ஒரு நாள் பயன்படுத்தும் போது வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு 8000 கிராம்.
# வாகன மாசுப்பாட்டை குறைப்பதற்காக இந்தியா பாரத் ஸ்டேஜ் விதிகளை அறிமுகப்படுத்தியது. தற்போது மத்திய அரசு பாரத் ஸ்டேஜ் 4 விதிகளிலிருந்து நேரடியாக பாரத் ஸ்டேஜ் 6 விதிகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளது. இதனால் வாகனங்களில் இன்ஜின்களில் இருந்து வெளிவரும் மாசுக்கள் கட்டுப்படுத்தப்படும்.
# சீனாவில் காற்றில் இருக்கும் மாசின் அளவு, பாதுகாப்பான வரம்பைக் காட்டிலும் 20 மடங்கு அதிகம். இதனால் ஆண்டுக்கு 3.5 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான மக்கள் உயிரிழக்கின்றனர்.
# சீனாவில் 3 லிட்டர் காற்று அடைக்கப்பட்ட ஒரு பாட்டிலின் விலை 32 டாலர். இந்திய மதிப்பில் 2,100 ரூபாய்.