French, asked by balakumar272, 8 months ago

cleanliness essay in tamil​

Answers

Answered by xyz3920
7

Answer:

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது என்று மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பாராட்டியுள்ளார்.

காற்று மண்டலம் மாசடைவதை கட்டுப்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கு டெல்லியில் நடந்தது. இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து இருந்தது.

இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்கள் கலந்து கொண்டு, மாசை கட்டுப்படுத்த தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கைகள் சமர்ப்பித்தன.

தமிழகத்தின் சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தலைவர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, அறிக்கை சமர்ப்பித்தார். அப்போது அவர் பேசுகையில்,

தொழிற்சாலைகளில் இருந்து மாசுபட்ட காற்றை நள்ளிரவிலும், அதிகாலையிலும் தான் அதிகமாக வெளியேற்றுகிறார்கள். இதை கண்காணிக்கவும், கட்டுக்குள் கொண்டுவரவும் நவீன யுக்திகளை தமிழக அரசு கையாண்டு வருகிறது.

மேலும், தமிழக அரசு அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாசடைந்த காற்றால் வாயு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, நிமிடத்துக்கு நிமிடம் விவரங்கள் சேகரிக்கிறது. அந்த விவரங்களின் அடிப்படையில் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கிறது. இது மட்டுமின்றி சுற்றுச்சூழலை பாதுகாக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அவர் விரிவாக எடுத்துரைத்தார்.

அதன் பின்னர் பேசிய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,

வாயு மண்டலம் மாசடைவதை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்குரியன. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், முதன்மையான மாநிலமாகவும் திகழ்கிறது.

hope it help u.

mark it brainlist..

Answered by cskooo7
61

Explanation:

துபாய் முனிசிபாலிட்டி, யுஏஇ தமிழ்ச் சங்கம், மற்றும் மலையாள சங்கமும் இனைந்து அக்டோபர் மாதம் 29ம் தேதி மிக பிரம்மாண்டமான CLEAN UP THE WORLD CAMPAIGN 2010 என்ற நிகழ்ச்சியை வெகு சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி முடித்தன.

காலை 8.30 மணிக்கு துவங்கி மதியம் 12:00 மணிக்கு முடிவடைந்த்து. இதில் சுமார் 15,000 மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

யுஏஇ தமிழ்ச்சங்கம் சார்பாக சுமார் 400 க்கும் மேற்ப்பட்டோர் நடந்த Clean up the World Campaign 201 ல் கலந்து கொண்டது மிக சிறப்பாகவும், பெருமையாகவும் இருந்தது.

மேலும் அன்று நடைப்பெற்ற நிகழ்ச்சியில் வந்த மக்களில் அதிக குடும்பமாக வந்தது யுஏஇ தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர்கள் தான் என்பதில் யுஏஇ தமிழ்ச்சங்கம் மிகவும் பெருமை அடைகிறது.

நிகழ்ச்சியில் 2 மாத மழலையும் (ஜொனார்தன் பிராஸ்பர்) கலந்து கொண்டது நெகிழ்ச்சியின் உயரம்.

பங்கு பெற்ற அனைவருக்கும் துபாய் முனிசிபாலிட்டி T-Shirt, Cap, Gloves வழங்கியது.

துபாய் முனிசிபாலிட்டி நிகழ்ச்சி ஆலோசகர் யுஏஇ தழிழ்ச் சங்கத்தின் பங்கு அளிப்பை பாராட்டி ஒரு நினைவு பரிசையும் வழங்கி, கலந்து கொண்ட அத்துனை குடும்பத்திற்க்கும், குழந்தைகளுக்கும் நன்றி பாராட்டினார்

follow me

mark as brainlest answer

Similar questions