India Languages, asked by kesavankishore, 28 days ago

பகுபத உறுப்பிலக்கணம் தருக (i)அடுக்கிய (ii)அறிந்து (iii)நின்றான் (iv)பாடினாள் (v)அழுதான் (vi)எய்துவர்​

Answers

Answered by amanKukrej643
1

Explanation:

பகுபத உறுப்பிலக்கணம் தருக (i)அடுக்கிய (ii)அறிந்து (iii)நின்றான் (iv)பாடினாள் (v)அழுதான் (vi)எய்துவர்

Answered by sarahssynergy
0

1) அடுக்கிய= அடுக்கு(க்) + இய

  • அடுக்கு - பகுதி
  • க்+உ - ஆனது விகாரம் .
  • இய - வியங்கோல் வினைமுற்று விகுதி.

2) அறிந்து அறி + த் ( ந் ) + த் + உ.

  • அறி - பகுதி, த் சந்தி, - த் -ந் ஆனது விகாரம்,
  • த் - இறந்தகால இடைநிலை,
  • உ - வினையெச்ச விகுதி.

3) நின்றான் =நில் (ன்) +ற்+ஆன்.

  • நில் - பகுதி , "ல் "-"ன" ஆனது விகாரம்
  • ற் - இறந்தகால இடைநிலை
  • ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி.

4) பாடினாள் - பாடு(ட)+ இன்+ ஆள்

  • பாடு - பகுதி , ட்+உ ஆனது விகாரம்.
  • இன்- இறந்தகால இடைநிலை.
  • ஆள் - பெண்பால் விகுதி.

5 ) அழுதான் = அழு+ த்+ ஆன்

  • அழு - பகுதி
  • த்- இறந்தகால இடைநிலை
  • ஆன் - ஆண்பால் விகுதி.

6) எய்துவர் எய்து + வ் + அர்.

  • எய்து - பகுதி,
  • வ் - எதிர்கால இடைநிலை,
  • அர் - பலர்பால் வினைமுற்று விகுதி.

Explanation:

  • பதம் என்றால் "சொல்" என்பது பொருள்.பதம்- சொல். சொல் இரண்டு வகைப்படும் அவை பகுபதம் மற்றும் பகாபதம் ஆகும்.
  • பிரிக்க முடியாத சொற்களை "பகாபதம்" என்றும் பிரிக்கக்கூடிய வகையில் அமைந்தசொற்களை "பகுபதம்" என்றும் கூறுவர்.
  • பகுபதத்தை பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்ற ஆறாகப் பகுக்க முடியும். இவை பகுபத உறுப்புகள் என்கிறோம்.
  • இவைபொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறுவகைப் பெயர்களையும் அடிப்படையாகக் கொண்டு பிறக்கின்ற பெயர்ச்சொற்கள்; தெரிநிலை வினை ஆயினும், குறிப்பு வினை ஆயினும் காலத்தைக்காட்டுகின்ற வினைச் சொற்கள் ஆகியவை பகுபதங்கள் எனப்படும்.
Similar questions