Social Sciences, asked by aaabhishek354, 1 year ago

Information about ambujathammal in tamil

Answers

Answered by kashisharora
4
பத்மஸ்ரீ’ அம்புஜம்மாள்
திருவேங்கிமலை சரவணன்

இந்த வாரம் நாம் சந்திக்கப் போகும் மறக்க முடியாத மங்கை ‘பத்மஸ்ரீ’ அம்புஜம்மாள். எல்லோரும் அவரை அம்புஜம்மாள் என்றழைத்தாலும் மகாத்மா காந்திஜி மட்டும் ‘அம்புஜம்’ என்று அன்பாய் அழைப்பார்.

காந்திஜியின் அன்புக்கே பாத்திரமாய் இருந்த அம்புஜம்-மாளுக்கு இளமைப் பருவத்தில் அத்தனை அன்பு கிடைக்கவில்லை. பிறந்ததுமே உற்றார், உறவினர்களால் தூற்றப்பட்ட பெண்தான் அம்புஜம்மாள். காரணம் பெண்ணாகப் பிறந்தது.

1899_ம் வருடம், சென்னை சீனிவாச அய்யங்கார், ரங்கநாயகி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார் அம்புஜம்மாள், மூன்றாவது பெண் குழந்தையாக. இதில் குடும்பத்தாருக்கு வெறுப்பு. மூன்றும் பெண் குழந்தையாகிவிட்டதே. அதிகம் வளர்ச்சியுறாத காலகட்டம் அது என்றாலும், அம்புஜம்மாள் பிறந்தது சாதாரண குடும்பமல்ல. தாய்வழி தாத்தா சர்.வி.பாஷ்யம் அய்யங்கார் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். சென்னையில் முதல் பெண்களுக்கான பள்ளியை நிறுவியவர். இன்று அந்தப் பள்ளி லேடி சிவஸ்வாமி ஐயர் உயர்நிலைப் பள்ளி என்ற பெயரில் புகழ் பெற்று விளங்குகிறது. அதேபோல், திருவல்லிக்கேணியில் உள்ள மகப்பேறு அவரது முயற்சியில் உருவானதுதான்.

தாத்தா அப்படியென்றால், தந்தை சீனிவாச அய்யங்காரும் லேசுப்பட்டவர் அல்ல. புகழ் பெற்ற வழக்கறிஞர். சென்னை மாநில அட்வகேட் ஜெனரலாகப் பணி புரிந்தவர். இத்தனை பாரம்பர்யம், பின்னணி இருந்தும் இளமையில் அம்புஜம்மாளுக்குப் பிரச்னை. அவர் பிறந்த சில மாதங்களிலேயே அவருக்கு தோல்வியாதி வந்து பார்க்கவே படுபயங்கரமாகி விட்டார். மற்ற குழந்தைகளைப் பாசத்துடன் கொஞ்சுபவர்கள்கூட குழந்தை அம்புஜம்மாளை நெருங்கத் தயங்கினார்கள். இதற்கிடையே, அம்புஜம்மாளின் அக்கா இறந்துவிட அதற்கும் அம்புஜம்மாள்தான் காரணமாக சொல்லப்பட்டார்! ‘பிறந்த ராசி அக்காவை சாப்பிட்டுட்டா’ என்று ஒதுக்கினார்கள்.

சென்னை வெயில் ஒத்துக்கொள்ளாததால்தான் தோல் வியாதி என்று கண்டறிந்து அம்புஜம்மாளை பெங்களூரில் உள்ள உறவினர் இல்லத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அங்குதான் அம்புஜம்மாள் வளர்ந்தார். தோல் நோய் குணமாகியதும் சென்னை கூட்டி வரப்பட்டார். இதற்கிடையே, ரங்கநாயகிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குடும்பத்தில் எல்லோருக்கும் சந்தோஷம். அம்புஜம்மாளுக்கும் தம்பி வந்ததில் மகிழ்ச்சிதான். ஆனால், அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. குடும்பத்தின் ஆண் குழந்தையை எல்லோரும் கொண்டாட மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டார் அம்புஜம்மாள்.

தம்பி பார்த்தசாரதிக்கு ஏழு வயதாகும்போது, அவனை பள்ளியில் சேர்த்தார்கள். ஆனால், மூத்தவள் அம்புஜம்மாளை வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டார்கள். அது அவரை மிகவும் பாதித்து விட்டது. படித்தவர்கள், உயர் வகுப்பினர் என்று சொல்லப்பட்டவர்கள்_ ஆனால் அவர்கள் குடும்பத்திலும் ஆண் பெண் பேதமிருந்தது. மகனின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடிய குடும்பத்தினர் மகளின் பிறந்தநாளை மறந்து விடுவார்கள்.

ஆனாலும் அம்புஜம்மாளுக்குப் படிக்க வேண்டும் என்று ஆர்வம். அம்மா_அப்பாவைக் கெஞ்சினார். தாத்தாவிடம் கேட்டார். மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு அனுமதி கிடைத்தது. பள்ளிக்கூடம் போக அல்ல, வீட்டிலேயே படிக்க. அம்புஜம்மாளுக்கு வீட்டிலேயே பாடங்களைச் சொல்லிக் கொடுக்க ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்-மணியை வேலைக்கு அமர்த்-தினார்கள்.

இப்படியே போய்க் கொண்டி-ருந்த அம்புஜம்மாளின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை சம்பவம் நிகழ்ந்தது.

அம்புஜம்மாளின் தந்தை சீனிவாச அய்யங்கார் காங்கிரஸ் தலைவர்-களிடம் நெருங்கிப் பழகுபவர். ஒருமுறை ராஜாஜி இங்கிலாந்து சென்று திரும்பினார். அவருக்கு ஒரு விருந்துக் கொடுத்தார் சீனிவாச அய்யங்கார். இதையறிந்ததும் அம்புஜம்மாளின் பாட்டிக்குக் கோபம். ‘கடல் கடந்து போய் வந்தவருக்கு விருந்தா? நம் ஆச்சாரமே போச்சு. இனி நான் இந்த வீட்டில் தண்ணீர்கூட குடிக்க மாட்டேன்’ என்று கிளம்பிப்போய்விட்டார். இது அம்புஜம்மாளின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வீணான மூட நம்பிக்கைகள் மீதும் பழக்க வழக்கங்கள் மீதும் கோபம் ஏற்பட்டது. தன் வாழ்க்கை இவர்களைப் போல் அமைந்து விடக் கூடாது என்று எண்ணினார்.
Similar questions