CBSE BOARD X, asked by lakshanaseeniva, 1 year ago

kadukalin payangal essay in tamil

Answers

Answered by Secondman
160

அறிமுகம்: உலகின் மிக முக்கியமான மற்றும் மதிப்பு வாய்ந்த ஆதாரமாக வனப்பகுதிகள் உள்ளன. உலகெங்கும் காணப்படும் பல்வேறு வகைகளில் வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களும் உள்ளன. காடுகளிலும் உலகத்தாலும் மனித இனத்தின் வசிப்பிடங்கள் தோன்றுகின்றன. வனப்பகுதிகளில் ஏராளமான பயன்கள் உள்ளன, அவை கீழே விவரிக்கப்பட்டுள்ளன.  

உணவு ஆதாரம்: வனப்பகுதிகளில் இறைச்சி மற்றும் தாவரங்கள் நிறைந்த உணவுகள் உள்ளன. இன்றைய சந்தையில் கிடைக்கும் பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்கள் அந்த நாட்களில் காடுகளில் உற்பத்தி செய்யப்பட்டன. மேலும், இறைச்சியைப் பயன்படுத்திக் கொள்ளும் விலங்குகள் ஒரு காலத்தில் காடுகளில் தோன்றுகின்றன. சில வகையான காட்டு பழங்கள் மற்றும் இறைச்சி இன்னும் உலகின் பல்வேறு பகுதிகளில் சுவையானதாக கருதப்படுகின்றன. சில தாவரங்கள் மற்றும் பூச்சிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. உதாரணமாக, தேனீ தயாரிக்கும் தேன் ஆரோக்கியத்திற்கு நல்லது.

எரிசக்தி ஆதாரம்: கிராமப்புறங்களில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் எரிசக்தி ஆதாரங்களில் காடு மரங்கள் ஒன்று. இது தவிர, காடுகளில் பிரபலமான எரிசக்தி ஆதாரங்கள் கொண்ட நிலக்கரி போன்ற படிம எரிபொருள்கள் உள்ளன.

மரம்: ஓக், தேக்கு கட்டடங்களில் பயன்படுத்தப்படும் காட்டு மரங்கள். இந்த மரங்கள் கப்பல்கள், ரயில் தடங்கள், வீடுகள், தரையிறங்கள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் போன்றவற்றைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவை பொதுவாக மிகவும் வலுவானவை.

மருத்துவ பயன்கள்: காடுகளில் இருந்து பெறப்பட்ட பல பொருட்கள் இயற்கையாகவே உள்ளன. மலேரியா நோய்க்கு சிகிச்சையளிக்கும் குயினைனை கொயினா பட்டை பயன்படுத்தப்படுகிறது. மேலும், காடுகள் காணப்படும் பல மருத்துவ தாவரங்கள் காய்ச்சல், இருமல், குளிர் போன்ற வியாதிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: வனப்பகுதி பெரிய மற்றும் பல்வேறு சிக்கலான சுற்றுச்சூழல் முறைமை கொண்டது. முழு உலகின் சுற்றுச்சூழலில் சமநிலையை காப்பாற்றவும் பராமரிக்கவும் வனத்தின் உதவுகிறது. மரங்களின் அடர்த்தியான வேர்கள் அரிப்பைத் தடுக்கின்றன மற்றும் மேல் மண்ணைப் பாதுகாக்க உதவுகின்றன. சுற்றுச்சூழலில் பல்வேறு உயிரினங்களில் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

முடிவு: எனவே, காடுகள் சுற்றுச்சூழல் மற்றும் வர்த்தக இரண்டும் மாறுபட்ட பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. இந்த அருமையான வளங்களை அதிக அளவில் சுரண்டுவது தடுக்கப்பட வேண்டும் மற்றும் ஒரு சரியான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

Answered by m10400671
19

Answer: Kadukalin payangal essay in tamil

Explanation:

காடு இல்லாமல் மனிதனுக்கு எதுவும் ஆவதில்லை அவை நமக்கு மரம், மரச் சாராயம், பலவித பிசின்கள் ஆகியவை தருகின்றன. காட்டு மரங்களிலிருந்தே நாம் காகிதங்களையும் செயற்கைப் பட்டுகளையும் உருவாக்குகிறோம்.

முற்காலத்தில் மனிதன் காடுகளை நாசப்படுத்தியதோடு அழித்தும் வந்தான். காடுகள் இவ்வாறு அழிந்துவிட்டதால் மரங்களும் ஏனைய பயனுக்குரிய பொருட்களும் கிடைக்காமல் போனது மட்டுமல்ல நாட்டின் தட்ப வெப்ப நிலை மாறியதோடு அதன் தன்மையே மாறுவதாயிற்று. காடுகள் மறைந்த இடங்களிலெல்லாம் பாலைவனங்கள் தோன்றலாயின.

Share

காடுகள் நீர் வளத்தைப் பாதுகாக்கின்றன. மலைகளிலுள்ள அடர்ந்த காடுகளில் மழை பெய்யும் போது, மரங்களின் இலைகளால அதன் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு நீர் வீழுவதால் அங்குள்ள வளமான மண் கரைந்து போவதில்லை. இழுத்துச் செல்லும் மண்ணை மலைச் சரிவிலுள்ள மர வேர்கள் தடை செய்து கொள்கின்றன.

மலைகளில் மரங்களே இல்லாதிருக்குமாயின், மழை வேகமாகப் பெய்து அங்குள்ள வளமான மண்ணை இழுத்துக் கொண்டு போய் விடுகிறது. குளிர்காலங்களில் மலையில் பெய்து உறையும் பனி வெறும் தரையில் விரைவில் உருகி விடும்.

காடுகளில் பெய்யும் பனி மெதுவாகவே உருகும். மேலும் இந்நீர் நிலங்களுக்கும், பண்ணைகளுக்கும், ஊற்றுக்களுக்கும் பூமியின் அடியிலுள்ள ஓடைகளுக்கும் மெதுவாகச் சென்று பரவுகிறது.

வேகமுடைய வெள்ளப் பெருக்கு மரங்களை வீழ்த்தி விடுகின்றது. வெற்றிடத்தில் விழும் மழை நீரும், உருகும் பனிநீரும் மெதுவாகச் செல்வதற்குப் பதிலாக துரித கதியில் சென்று மறைந்து விடுகிறது.

வண்டல் மண்ணை வாய்க்கால், ஆறுகள், கடல் ஆகியவற்றுக்கு மழை நீர் இழுத்துச் செல்வதினின்றும் காடுகள் தடை செய்கின்றன மரங்களின் வேர்களும், கொப்புகளும் வண்டல் மண் போகாது தடுத்து விடுகின்றன.

ஐரோப்பாவிலும் ஏனைய பல இடங்களிலும் மலையைக் கொண்ட பல மாவட்டங்கள் வெறுமையாகக் காட்சியளிப்பதுடன் பயனற்றும் உள்ளன. அதற்குக் காரணம் ஆண்டுக்கணக்காய் மரங்களை முறித்துக் காடுகளை அழித்ததால் அங்குள்ள வண்டல் மண் முழுவதும் நீரால் இழுத்துச் செல்லப்பட்டதே ஆகும். இப்போது அவ்விடங்களில் எதுவுமே பயிராவதில்லை.

ஆண்டுதோறும் ஓடைகளும், ஆறுகளும் கடலுக்குக் கொண்டு செல்லும் வண்டல் மண் 200000,000 பவுன்களுக்கும் மேலான மதிப்புடையதென்று கணக்கிட்டுள்ளனர். துறைமுகங்கள், நதிக் கால்வாய்கள் போன்றவற்றிலிருந்து இம்மண்ணை மாற்றி அகற்றுவதற்கும் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்யப்படுகின்றன.

இவ்வாறு பெரு மழை பெய்து வண்டல் கொண்டு செல்லப்பட்டு வெறுமையான நிலங்களில் பயிரேற்றுவதற்கு பெரும் தொகை செலவு செய்யப்படுகின்றது. இதனால் மக்களின் செல்வம் அழிந்து வருகின்றது.

இதனை உணர்ந்த சில மேல் நாட்டு மக்கள் இனியும் காடுகளை அழித்தால் மரங்கள், மரச்சாமான்கள, காகிதங்கள், கட்டடச் சாமான்கள் போன்வற்றை தயாரிக்க மரங்கள் கிடைக்காது என்ற காரணத்தினால் நன்கு வளர்ந்த மரங்களை வெட்டுவது தடை செய்யப்ட்டுள்ளது. தேவைக்கு வெட்டினால், அந்த இடத்தில் அதற்கு இனையான செடிகளை வைத்து காடுகளாக வளர்க்கின்றனர்.

இப்போது, பழகலைகழங்களில் காடுகளைப்பற்றியும் அதன் பலன்களைப்பற்றியும் விழிப்புனர்வு பாடங்களை மக்கள் மத்தியில் எடுத்து வருகின்றனர்.

முடிந்தவரை நாமும் மரங்களை காப்போம், நம் அன்னை பூமியை காப்போம்.

Similar questions