NATTU nalapani thittam give the essay in Tamil
Answers
Answer:
மத்திய மாநில அரசுகள் நிதிஉதவியுடன் செயல்படுத்தப்படும் நாட்டு நலப் பணித் திட்டம், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் வாழ்வியல் திட்டம் என்றால் மிகையாகாது.ஆசிரியர், பாடப் புத்தகங்கள், கரும்பலகை, தேர்வு, வகுப்பறை இப்படித்தான் மாணவர்களின் கல்விப் பயணம் பயணிக்கிறது. அதையும் தாண்டி களத்தில் நின்று சமூகத்தை உற்று நோக்கும் யதார்த்த வாழ்வியலை இத்திட்டம் முன்வைக்கிறது.'தனக்காக இல்லாமல் பிறருக்காக முடிந்ததை செய்ய வேண்டும்' என்ற கருத்தாக்கத்தை இத்திட்டம் முன்மொழிகிறது. 1969 செப்., 24 ல் துவங்கப்பட்டது.நான் அல்ல நீ, எனக்காக அல்ல உனக்காக எனும் பொதுநலன் சார்ந்த தன்னலமற்ற சேவையே இத்திட்டத்தின் மையப்புள்ளி. அடிப்படை வாழ்வியலுக்காக அன்றாடம் போராடும் எத்தனையோ முகம் தெரியாத மனிதர்களை உள்ளடக்கிய இச்சமூகத்தை இனம் காட்டி, அவர்கள் இன்னல்களை தீர்க்க வழியமைத்துக்கொடுக்கும் அன்பும் பாலமாக இத்திட்டம் தன்னை அடையாளப்படுத்தி நிற்கிறது.ரோடு அமைத்தல், குளங்களை துார்வாருதல், கல்லாதவர்களுக்கு கற்றுக்கொடுத்தல், மரம் நடுதல், ஊனமுற்றோருக்கு உதவுதல், சுற்றுப்புறத்தை துாய்மையாக்குதல், கிராமங்களை தத்தெடுத்தல், மருத்துவ உதவி செய்து கொடுத்தல், முதியோருக்கு உதவிடுதல், கோயில்களை சுத்தப்படுத்துதல், கலை நிகழ்ச்சி நடத்துதல் போன்ற பொதுநலன் சார்ந்த செயல்பாடுகளை இத்திட்டம் உள்ளடக்கியது.பொதுநலன் சார்ந்த பண்புகளை இளம் வயதில் மாணவர்களின் மனதில் பதியம் போட்டு நீர் ஊற்றி வளர்த்து அவன் கல்வி நிலையத்தை விட்டு வெளியே செல்லும்போது சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு ஆளுமையாக மாற்றம் செய்யும் உன்னத பணியை இத்திட்டம் செய்கிறது.