சிந்து வெளி நாகரிகதின் மறைந்த pokkishangangalai பற்றி எழுதுக
Answers
Answer:
சிந்து வெளிப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பது பற்றி உறுதியாக அறிந்து கொள்வதற்கான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனாலும், ஆய்வாளர்கள் பல்வேறு ஒன்றுக்கொன்று முரண்படுகின்ற கருத்துக்களை முன் வைத்து வாதிட்டு வருகின்றனர். சிந்து வெளி பண்பாட்டுக்கு உரியவர்கள் திராவிட இனத்தவர்களே என ஒரு சாராரும், இல்லை ஆரியரே என இன்னொரு பகுதியினரும் கூற வேறு பலர் பலவிதமான கலப்பினக் கொள்கைகளையும் முன் வைத்துள்ளனர்.
பொருளாதாரம்
பண்டைய லோத்தல் நகரிலுள்ள கப்பற் துறையின் இன்றைய தோற்றம்
சிந்துவெளி நாகரிகத்தின் பொருளாதாரம் வணிகத்திலேயே பெரும்பாலும் தங்கியிருந்தது எனலாம். போக்குவரத்துத் தொழில்நுட்பத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்பட்டமை இதற்குக் காரணமாகும். சிந்துவெளி நாகரிக மக்களே சக்கரத்தை முதன்முதலில் பயன்படுத்தியிருக்கக்கூடும்.[3] இன்று தெற்காசியா முழுவதும் காணக்கூடிய மாட்டு வண்டிகளும், படகுகளும் அன்று பயன்படுத்தப்பட்டிருக்கலாம். படகுகள் பெரும்பாலும் சிறிய தட்டையான வடிவில் காணப்பட்டதோடு, இவை பாய்மரம் மூலம் செயற்படுத்தப்பட்டிருக்கலாம். தொல்பொருளியலாளர்கள் மேற்கு இந்தியாவின் குஜராத்தின் கடற்கரை நகரான லோத்தலில் பாரிய ஆழமான கால்வாயொன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு கப்பற்துறையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும் நீர்ப்பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்ட பாரிய கால்வாய் வலையமைப்பொன்றை H. P. பிராங்போர்ட் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
4300–3200 BCEக்கு இடைப்பட்ட கல்கோலிதிக் (செப்புக் காலம்) காலத்தில், சிந்துவெளி நாகரிகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட செரமிக் பொருட்கள் தெற்கு துர்க்மெனிஸ்தானிலும், வடக்கு ஈரானிலும் காணப்பட்ட செரமிக் பாண்டங்களுடன் ஒத்துப்போகின்றன. இதன் மூலம் சிந்துவெளி மக்கள் அப்பகுதிகளுடன் வணிகத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. முந்திய ஹரப்பாக் காலத்தில் (கிட்டத்தட்ட 3200–2600 BCE) மட்பாண்டங்கள், முத்திரைகள், உருவங்கள், அணிகலன்கள் போன்றவை, மத்திய ஆசியா மற்றும் ஈரானியப் பீடபூமிப் பிரதேசங்களுடன் சிறப்பான முறையில் வணிகம் நடைபெற்றதை எடுத்துக்காட்டுகின்றன.[4]
சிந்துவெளி நாகரிக கலைப்படைப்புகளின் பரவலைக் கொண்டு மதிப்பிடும் போது, வணிகத் தொடர்புகள் ஒரு பரந்த பிரதேசத்தில் நடைபெற்றிருப்பதைக் காணமுடிகிறது. இப் பகுதிகள், ஆப்கானிஸ்தானின் பகுதிகள், பாரசீகத்தின் கடற்கரைப் பகுதிகள், வடக்கு மற்றும் மேற்கு இந்தியா மற்றும் மெசொப்பொத்தேமியா ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.
வணிகத் தொடர்புகள் கிரீட் மற்றும் எகிப்து வரை பரந்திருந்தமைக்கான சில சான்றுகளும் உள்ளன.[5]
நடு ஹரப்பாக் காலத்திலேயே, ஹரப்பா மற்றும் மெசொப்பொத்தேமிய நாகரிகங்களுக்கிடையில் பாரிய கடல்வழி வணிக நடவடிக்கைகள் காணப்பட்டுள்ளன. இவ் வணிக நடவடிக்கைகளில் பெரும்பாலானவற்றை "தில்முன்னிலுள்ள நடுத்தர வணிகர்கள்" முன்னெடுத்தனர் (பாரசீக வளைகுடாவிலுள்ள இன்றைய பக்ரைன் மற்றும் பைலகா பகுதிகள்).[6] பலகையினால் கட்டப்பட்ட, தனிக் கொடிமரத்தில் கட்டப்பட்ட பாய்மரப் படகுகள் மூலமாக இவ்வாறான நீண்ட தூர கடல் வணிகம் சாத்தியமானது.
பாகிஸ்தானிலுள்ள சொட்காஜென்-டோர் (ஜிவானிக்கு வடக்கேயுள்ள அஸ்ட்ரைட் டாஸ்ட் நதி), சொக்டா கொஹ் (பஸ்னிக்கு வடக்கேயுள்ள அஸ்ட்ரைட் ஷாடி நதி) மற்றும் பாலாகோட் (சொன்மியானிக்கு அருகிலுள்ளது) போன்ற கரையோரக் குடியிருப்புக்கள் மற்றும் இந்தியாவிலுள்ள லோத்தல் ஆகியன, ஹரப்பாவின் வணிக நிலையங்களாக இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன. கடலுக்கு அருகிலுள்ள கழிமுகங்களில் அமைந்துள்ள ஆழமற்ற துறைமுகங்கள், மெசொப்பொத்தேமியா நகரங்களுடன் சிறப்பான வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியுள்ளன.
Explanation:
pls mark me brainliest