India Languages, asked by tamilhelp, 1 year ago

திருக்குறளின்‌ அழியாத்‌ தன்மையை எடுத்துரைத்தவர்‌ :
(௮) இடைக்காடனார்‌ (ஆ) இறையனார்‌
(இ) கம்பர்‌ (ஈ) கபிலர்‌

Answers

Answered by kamalchem1980
1

Explanation:

திருக்குறள் – (திரு + குறள்) சிறந்த குறள் வெண்பாக்களினால் ஆகிய

நூல் ஆதலின் இப்பெயர் பெற்றது.

குறள் – இரண்டடி வெண்பா, திரு – சிறப்பு அடைமொழி, குறள் என்பது

குறட்பாவை உணர்த்தாமல் அப்பாக்களால் ஆகிய நூலை உணர்த்துவதால் ஆகுபெயர், திருக்குறள் என்பது அடையெடுத்த ஆகுபெயர் ஆகும்.

Answered by anjalin
1

Answer:

(ஆ) இறையனார்‌

  • குறள்‌ - இரண்டடி வெண்பா, திரு - சிறப்பு அடைமொழி, குறள்‌ என்பது  குறட்பாவை உணர்த்தாமல்‌ அப்பாக்களால்‌ ஆகிய நூலை உணர்த்துவதால்‌ ஆகுபெயர்‌, திருக்குறள்‌ என்பது அடையெடுத்த  ஆகுபெயர்‌ ஆகும்‌.
  • இது தமிழில்‌ வழங்கும்‌ பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்‌ ஒன்று.
  • இந்நூலின்‌ பெருமையைத்‌ “திருவள்ளுவமாலை" நன்கு  விளக்குகின்றது.

“என்றும்‌ புலரா தியாணர்நாட்‌ செல்லுகினும்‌

நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாயக்‌ - குன்றாக

செந்தளிர்க்‌ கற்பகத்தின்‌ தெய்வத்‌ திருமலர்போன்ம்‌

மன்புலவன் வள்ளுவன்வாய்ச்‌ சொல்‌"

- இறையனார்‌

என்னும்‌ திருவள்ளுவமாலையிலுள்ள செய்யுள்‌ திருக்குறளின்‌ அழியாத்‌ தன்மையைப்‌ பறைசாற்றுகிறது.

  • இப்பாடலின்‌ மூலம்‌  திருக்குறளின்‌ அழியாத்‌ தன்மையை இறையனார்‌ கூறுகிறார்‌.

Similar questions