India Languages, asked by RobinRodrigues7304, 8 months ago

அ) ஜூல் வெப்ப விதி வரையறு.நிக்கல் மற்றும் குரோமியம் கலந்த உலோகக்
கலவை மின்சார வெப்பமேற்றும் சாதனமாக
பயன்படுத்தப்படுவது ஏன்?ஒரு மின் உருகு இழை எவ்வாறு
மின்சாதனங்களை பாதுகாக்கிறது?

Answers

Answered by shruti225143
2

plz mate translate it into english

Answered by steffiaspinno
3

ஜூல் வெப்ப விதி:

  • ஒரு மின்தடையில் உருவாகும் வெப்பமானது  அதன் வழியே பாயும் மின்னோட்டத்தின் இருமடிக்கு நேர் விகிதத்திலும் , மின் தடைக்கு நேர் விகிதத்திலும் மின்னோட்டம் பாயும் காலத்திற்கு நேர் விகிதத்திலும் இருக்கும்.

                    H = I^2 R t

  • நிக்கல் மற்றும் குரோமியம் கலந்த நிக்ரோம் எனும் கலவையானது வெப்பத்தினை உண்டாக்க பயன்படுகிறது.
  • ஏனெனில் இப்பொருள்  அதிக மின்தடை மற்றும் அதிக உருகுநிலை கொண்டது, விரைவில் ஆக்சிகரணத்திற்கு உள்ளாகாது.  

மின் உருகு இழை :

  • மின்சுற்றோடு தொடராக இணைக்கப்படுவது மின் உருகு இழையாகும் .
  • சுற்றில் அதிகளவு மின்னோட்டம் பாயும் போது ஜுல் வெப்ப விளைவால் மின்உருகு இழை உருகி மின்சுற்று துண்டிக்கப்படுகிறது.
  • எனவே, மின்சுற்றும், மின்சாதனங்களும் சேதமடைவதிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
  • குறைந்த உருகுநிலையைக் கொண்ட பொருள்களால் மின்உருகு இழை செய்யப்படுகிறது.  
Similar questions