நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும். இக்குறட்பாவை அலகிட்டு வாய்ப்பாடு கூறுக.
Answers
Answered by
9
அலகிட்டு வாய்ப்பாடு
- நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்.
அலகிடுதல்
- நாச்செற்று == நாச் / செற் / று == நேர் + நேர் + நேர் == தேமாங்காய்
- விக்குள்மேல் == விக் / குள் / மேல் == நேர் + நேர் + நேர் == தேமாங்காய்
- வாராமுன் ==வா / ரா / முன் == நேர் + நேர் + நேர் == தேமாங்காய்
- நல்வினை == நல் / வினை == நேர் + நிரை == கூவிளம்
- மேற்சென்று == மேற் / சென் / று == நேர் + நேர் + நேர் == தேமாங்காய்
- செய்யப் == செய் / யப் == நேர் + நேர் == தேமா
- படும் == நிரை == மலர்
- நாச்செற்று என தொடங்கும் குறள் மலர் என்னும் வாய்ப்பாட்டால் முடிந்துள்ளது.
Similar questions