India Languages, asked by anjalin, 7 months ago

உலகத்தில் சிறந்த துணையாகவும் பகையாகவும் வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகிறார்?

Answers

Answered by sagarkhundia
3

Answer:

1.5 திருவள்ளுவர்

உலகிலுள்ள அறநெறியாளர்களுள், உலகளாவிய பார்வை

உடையவர்கள் (Universal Outlook) மிகச் சிலரே. அந்த மிகச்

சிலருள் ஒருவர் திருவள்ளுவர்.

தமிழ்நாட்டில் பிறந்து, தமிழர்களிடையே வாழ்ந்த வள்ளுவர்

கூறிய கருத்துகள், தமிழருக்கும் தமிழ்நாட்டிற்கும் மட்டுமா

சொந்தமானவை? இல்லை. உலகில் வாழும் மனித குலம்

முழுமைக்கும் சொந்தமானவை. எல்லாக் காலத்திலும்,

எல்லோருக்கும்; இனம், மொழி, நாடு என்ற எல்லையைக் கடந்து

பொருந்துபவை.

• சிறப்புகள்

வள்ளுவரின் சிறப்பு இயல்புகளைப் பற்றி வ.வே.சு. ஐயர் என்பவர்,

மிகவும் நுட்பமான கருத்துகளைச் சுருக்கி, ஏழு சீர்களில்

அமைத்துள்ளார். இச்சிறிய இன்னிசைக் கருவியில்அவர்

சிறந்த இசை வல்லுநரைப் (Expert) போல் எவ்வளவு

அழகாக இனிய கீதத்தை எழுப்பி இருக்கிறார்’

என்று வியக்கின்றார்.

• பெருமை

வள்ளுவரது உலகளாவிய சிந்தனையைக் கண்டு வியந்த, மகாகவி

பாரதியார்,

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

(பாரதியார் கவிதைகள், செந்தமிழ்நாடு : 25-26)

என்று பெருமையாகப் பாடுகிறார். சேக்ஸ்பியரால் இங்கிலாந்து

புகழ் பெற்றது போல், ஹோமரால் கிரேக்கம் சிறப்பு

அடைந்ததுபோல், வள்ளுவரால் தமிழ்நாடு புகழ் அடைந்தது.

திருவள்ளுவரது சிந்தனைகள், மொழி, இனம், சமயம், நாடு

என்னும் எல்லையைக் கடந்தது. எனவே, ஆங்கில நாட்டு அறிஞர்

டாக்டர் ஜி.யு.போப் என்பவர், ‘அனைத்துலக மனிதனைப் பற்றிப்

பாடிய பெருமைக்கு உரியவர் வள்ளுவர்’ என்று குறிப்பிடுகிறார்.

திருவள்ளுவரின் கருத்துகளின் சிறப்பினையும், செறிவினையும்

உணர்ந்த, அறிஞர்கள் பலர், உலகில் மிகச் சிறந்த

சிந்தனையாளராகக் கருதப்படும் சாக்ரடிஸ், கன்பூசியஸ்,

செனேக்கா, போன்றோரோடு ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்துள்ளனர்.

• வாழ்க்கை

இவரது வாழ்க்கை வரலாற்றைப் பற்றிப் பல கதைகள் உண்டு.

அவற்றிற்குச் சரியான சான்றுகள் இல்லை.

1.5.1 புரட்சியாளர்

மேலை நாடுகளில், பிரபு, அடிமை, குடியானவன் என்ற சமூகப்

பிரிவுகளே இருந்தன. ஆனால் இந்தியாவில், பிறப்பை

அடிப்படையாகக் கொண்ட சாதிப் பிரிவுகள் பல உண்டு. இந்தியச்

சமூகத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இவைகள் பெரிய

தடைகளாக உள்ளன. இக்கொடுமையை மாற்ற முயன்ற ஒரு

புரட்சிக்காரராக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே

வள்ளுவர் திகழ்ந்தார். ஒருவன் பிறந்த குடி, பிறரிடமிருந்து

அவனைப் பிரிக்காது; ஒதுக்காது. அவன் செய்யும் தொழிலே

அவனை வேறுபடுத்திக் காட்டும் என்று கீழே குறிப்பிடும் குறள்

மூலம் எடுத்துக்காட்டுகிறார்.

பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா

செய்தொழில் வேற்றுமையான்

(குறள்:972)

(பிறப்பு ஒக்கும் = பிறப்பு முறை ஒரு தன்மையதே,

ஒவ்வா = நிகரானவை அல்ல)

பாரம்பரியமாகச் சிலர் சமூகத்தின் மேல் மட்டத்திலிருந்து

கொண்டு அதிகாரம் செய்து கொண்டிருந்தனர். சிலர்

அவர்களுக்கு ஏவல் செய்யும் பணியாளர்களாகவும்,

அடிமைகளாகவும் இருந்தனர். இதன் காரணமாக அமைந்த சமூக

ஏற்றதாழ்வு ஒரு காலக்கட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தது.

இதனால் அரசர்கள், பிரபுக்கள், குடியானவர்கள், அடிமைகள்

என்ற சமூகப் பிரிவுகள் ஏற்பட்டன. பின்னர், அண்மைக்காலத்தில்

ஏற்பட்ட வர்க்கப் போராட்டத்தினால், முதலாளி தொழிலாளி

என்று பொருளாதாரத்தின் அடிப்படையில் சமூகம் பிரித்து

நோக்கப்பட்டது. பின்னர் பொருளாதார முன்னேற்றத்தின்

அடிப்படையில் முன்னேறிய நாட்டைச் சார்ந்தவர். முன்னேறாத

நாட்டைச் சார்ந்தவர், முன்னேறிக் கொண்டிருக்கும் நாட்டை

சார்ந்தவர் என்று பகுத்துப் பார்த்தனர். இன்று உலகளாவிய

நிலையில் நோக்கும்பொழுது, ஒருவன் செய்யும் தொழிலே

அவனை அடையாளம் காட்டுகின்றது.

ஒருவன் சார்ந்த நாட்டையோ, இனத்தையோ சுட்டாமல், ‘இவர்

ஓர் அறிவியலாளர், பொறியாளர், பேராசிரியர், மருத்துவர்’

என்றே அழைக்கும் மரபு பெருகி வருகிறது. இதனையே

வள்ளுவர், ஒருவன் செய்யும் தொழிலே அவனை வேறுபடுத்திக்

காட்டுகின்றது என்று குறிப்பிடுகின்றார். முன்னேறிய

நாடுகளாகிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் எந்தவித

வேறுபாடும் இல்லாமல், தொழில் செய்து வாழ்வதோடு,

அவர்கள் செய்யும் தொழில்களின் வாயிலாகவே அடையாளம்

காட்டப்படுகின்றனர்.

எனவே, சாதிவேறுபாடுடைய இந்திய சமூக அமைப்பை மாற்றி

அமைக்க முயற்சித்த வள்ளுவர், இன்றைய சமூக வளர்ச்சி

நிலையிலும் பின்பற்றக்கூடிய - பொருந்துகின்ற முறையை 2000

ஆண்டுகளுக்கு முன்னரே வெளியிட்டது பெரும் புரட்சிகரமான

செயல். இது வள்ளுவரது தொலைநோக்கிற்கு ஒரு சிறந்த

எடுத்துக்காட்டு.

பயில் முறைப் பயிற்சி - II

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றியான்

(குறள்:1062)

மாணவர்களே!

மேற்காணும் குறள் இறைவனையே ‘கெடுக’ என்று

சபிப்பதாக அமைந்துள்ளது. வள்ளுவரின்

இறைக்கோட்பாடு, மனித முயற்சியில் நம்பிக்கை, புரட்சிச்

சிந்தனை ஆகிய கோணங்களில் இருந்து இக்குறளின்

கருத்தைச் சிந்தியுங்கள். இக்குறளின் வழியாக வள்ளுவச்

சிந்தனையை மதிப்பீடு செய்து பாருங்கள்.

1.5.2 சிந்தனையாளர்

இந்த உலகில்வாழும் மனிதன் உட்பட்ட உயிரினங்களின் யாக்கை

(உடல்) அழிந்து போகக்கூடிய ஒன்று. அழியக்கூடிய இந்த

உடலைப் பற்றி - குறிப்பாக நிலையாமையைப் பற்றிச்

சமயவாதிகள், பல விளக்கங்களைக் கொடுக்கின்றனர். வள்ளுவரும்

இத்தகைய நிலையாமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். அது

எல்லோருக்கும் பொருந்துகின்ற எல்லாக் காலத்திற்கும்

பொருந்துகின்ற, இன்றளவும் நிரூபிக்கக்கூடிய ஓர் அரிய கருத்தாக

விளங்குகின்றது.

.

Explanation:

  • please thanks my answer
  • please mark me as brainlist answer if you want
  • follow me for more help
Answered by steffiaspinno
0

உலகத்தில் சிறந்த துணை ம‌ற்று‌ம் பகையாக வ‌ள்ளுவ‌ர் கூறுவன

திரு‌க்கு‌ற‌ள்  

  • உலக பொதுமறை என ‌ அழை‌க்க‌ப்படு‌‌‌ம் திரு‌க்குற‌‌ள் அற‌த்து‌ப்பா‌ல், பொரு‌ட்பா‌ல், காம‌த்து‌ப்பா‌ல் என மூ‌ன்று ‌பி‌ரிவுகளையு‌ம், 133 அ‌திகார‌ங்களையு‌ம், 1330 குற‌ட்பா‌க்களையு‌ம் கொ‌ண்டு உ‌ள்ளது.
  • மு‌ப்பா‌ல், பொ‌ய்யாமொ‌ழி, வாயுறைவா‌ழ்‌த்து, உ‌த்‌திரவேத‌ம் என பல ‌சிற‌ப்பு‌‌ப் பெய‌ர்களை கொ‌ண்டு உ‌ள்ளது.
  • ‌திரு‌க்குற‌‌ளி‌ன் ‌சி‌ற‌ப்‌பினை ‌விள‌க்க புலவ‌ர்களா‌ல் பாட‌ப்ப‌ட்ட நூ‌ல் ‌திருவ‌ள்ளுவமாலை ஆகு‌ம்.  

சிறந்த துணை ம‌ற்று‌ம் பகை

  • நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை; தீயினத்தின்
  • அல்லல் படுப்பதூஉம் இ‌ல்.  

விள‌க்‌க‌ம்

  • ந‌ல்ல குண‌முடையவ‌ர்களை ‌விட ‌சிற‌ந்த துணையு‌ம் இ‌ந்த உல‌கி‌ல் இ‌ல்லை.
  • ‌தீய இன‌த்‌தினை‌விட‌த் து‌ன்ப‌த்தை தரு‌ம் பகையு‌ம் இ‌ல்லை.
Similar questions