அறிவின் மேன்மை பற்றித் திருக்குறள் வழி நீவிர் கருதுவன யாவை?
Answers
Answered by
3
அறிவின் மேன்மை பற்றித் திருக்குறள் கூறுவன
- அறிவு ஆனது அழிவு வராமல் பாதுகாக்கும் கருவியாகவும், பகைவரால் அழிக்க இயலாத பாதுகாப்பு அரணாகவும் உள்ளது.
- மனத்தை அதன்போக்கில் செல்லவிடக் கூடாது.
- அவ்வாறு விட்டால் அது தீய வழியில் செல்லும்.
- எனவே தீய வழியில் செல்கின்ற மனதினை நல் வழியில் செலுத்துவதே அறிவுடைமை ஆகும்.
- எந்த ஒரு பொருளினை பற்றியும், எவர் கூறினாலும், அந்த பொருளின் உண்மையான பொருளினை அறிவதே அறிவு உடைமை ஆகும்.
- உலகம் எத்தகைய உயர்ந்த அறநெறியுடன் செல்லுகிறதோ, அந்த அறநெறியுடனான வழியினை பின்பற்றுவதே அறிவு உடைமை ஆகும்.
- பின்பு வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ளக் கூடிய வல்லமை உடைய அறிவுரையார்க்கு அவர்கள் நடுங்கும் படியான துன்பம் ஒன்றும் இல்லை.
- இவைகளே திருக்குறள் கூறும் அறிவின் மேன்மை ஆகும்.
Similar questions