CBSE BOARD X, asked by ggurugnanaprsath, 6 months ago

உங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலக இருக்கு கடிதம் எழுதுக​

Answers

Answered by msbhuvana15
28

Explanation:

அனுப்புநர்

அ. தமிழ்,

6, திருவள்ளுவர் தெரு,

சங்கரலிங்கபுரம்,

விருதுநகர் (மாவட்டம்).

பெறுநர்

மின்வாரிய அலுவலர்,

மின்வாரிய அலுவலகம்,

விருதுநகர்.

மதிப்பிற்குரிய அய்யா,

பொருள்: பழுதடைந்த மின் விளக்குகளை மாற்றித் தர வேண்டுதல் குறித்து…

வணக்கம். நான் மேற்கண்ட முகவரியில் நிரந்தரமாகக் குடியிருந்து வருகிறேன். எங்கள் தெருவில் சுமார் 100 வீடுகள் உள்ளன. 200 மீட்டர் நீளமுள்ள எங்கள் தெருவில் 4 மின் கம்பங்கள் உள்ளன. அதில் இரண்டு மின் கம்பங்களில் உள்ள தெருவிளக்குகள் பழுதடைந்துள்ளன.

அந்தப் பகுதி இருட்டாக இருப்பதால் திருடர்கள் நடமாட்டம் இருக்கிறது; நச்சு பூச்சிகளின் தொல்லையும் இருக்கின்றது. இதனால், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் பெரும் அச்சத்திற்கு ஆளாகின்றனர்.

இதனைத் தவிர்க்க, பழுதடைந்த மின் விளக்குகளை மாற்றித் தருமாறு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

உண்மையுள்ள,

அ. தமிழ்

இடம் : சங்கரலிங்கபுரம்

நாள் : 24.09.2020

உறைமேல் முகவரி:

பெறுநர்

மின்வாரிய அலுவலர்,

மின்வாரிய அலுவலகம்,

விருதுநகர்.

Answered by pranav5tharani9
2

this is the answer for this question

Attachments:
Similar questions