கீழ்க்கண்டவற்றுள் எது நுரையீரலில் நடைபெறும் வாயுப் பரிமாற்றத்தைச் சிறப்பாக விளக்குகிறது? அ) சுவாசத்தின் போது காற்று நுண்ணறைக்குள் வாயு நுழைவதும் வெளியேறுவதும் நடைபெறுகிறது. ஆ) இரத்த நுண் நாளங்களிலிருந்து கார்பன் டை ஆக்சைடு காற்று நுண்ணறையில் உள்ள காற்றில் விரவிச் செல்கிறது. இ) இரத்தம் மற்றும் காற்று நுண்ணறைகளுக்கிடையே அடர்த்தி வேறுபாட்டின் காரணமாக ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு விரவிச் செல்கிறது. ஈ) காற்று நுண்ணறைகளிலிருந்து ஆக்சிஜன், ஆக்சிஜனற்ற இரத்தத்திற்குள் விரவிச் செல்கிறது.
Answers
Answered by
0
Answer:
I know tamil but don't know to read soo sorry
Answered by
0
இரத்தம் மற்றும் காற்று நுண்ணறைகளுக்கிடையே அடர்த்தி வேறுபாட்டின் காரணமாக ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு விரவிச் செல்கிறது.
வாயு பரிமாற்றம்
- வாயு பரிமாற்றத்திற்கான முதன்மை சுவாசப் பரப்பு காற்று நுண்ணறைகள் ஆகும்.
- ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றின் பகுதி அழுத்த வேறுபாட்டின் காரணமாக திசுக்கள் மற்றும் இரத்தத்திற்கும் இடையே ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியன எளிய விரவல் முறை மூலம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
- பகுதி அழுத்தம் என்பது ஒவ்வொரு வாயுவும் தனிப்பட்ட அளவில் தரும் அழுத்தம் ஆகும்.
- pO2 என ஆக்சிஜனின் பகுதி அழுத்தமும், pCO2 என கார்பன் டை ஆக்சைடின் பகுதி அழுத்தமும் குறிப்பிடப்படுகிறது.
- பகுதி அழுத்த வேறுபாட்டின் காரணமாகவே காற்று நுண்ணறைகளில் உள்ள ஆக்சிஜன் இரத்தத்திற்குள் சென்று பின் திசுக்களை அடைகிறது.
Similar questions