நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answers
Answered by
4
Explanation:
ஊரின் வடகோடியில் இருந்த நாவற்பழமரம்கவிஞரின் ஐந்து வயதில் எப்படியிருந்ததோ அப்படியேதான் அவருடைய ஐம்பது வயதைத் தாண்டியும் இருந்தது.
கவிஞருடைய தாத்தாவின் தாத்தா காலத்தில் நடப்பட்ட மரம் என்று கவிஞர், தன் அப்பா சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறார்.
அந்த மரத்தில் பச்சைக் காய்கள் நிறம் மாறி செங்காய்த் தோற்றம் ஏற்பட்டவுடன் சிறுவர்களின் மனதில் பரவசம் பொங்கும். பளபளப்பான பச்சை இல்லைகளின் நடுவில், கிளைகளில் கருநீலக் குண்டுகளாய் நாவற்பழங்கள் தொங்குவதைப் பார்த்தவுடனேயே நாவில் நீருறும்.
பறவைகள், அணில்கள் மற்றும் காற்று ஆகியவற்றால் உதிர்ந்திடும் பழங்களைப் பொறுக்குவதற்காக சிறுவர் கூட்டம் அலைமோதும் எனக் கவிஞர் நாவல் மரம் பற்றிய தன்னுடைய நினைவுகளைக் கூறுகிறார்.
Similar questions