CBSE BOARD X, asked by davidjeyachandran, 6 months ago

கட்டுரை எழுதுக (முன்னுரை மழை நீர் - மழைநீர் சேமிப்பு விளைவுகள் - முடிவுரை)

Answers

Answered by vishalharidasan96
2

Explanation:

குறிப்புச்சட்டம்:

முன்னுரை

பொருளுரை

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்

மழைநீர் சேகரிக்கும் தளங்கள்

மழைநீர் சேகரிக்கும் முறை

முடிவுரை

முன்னுரை:

நிலம் ,நீர், நெருப்பு, காற்று ஆகாயம் பஞ்ச பூதங்களின் கூட்டு சேர்க்கையால் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது . அதிலும் நீரின்றி உலகில் எந்த உயிரும் இயங்காது.

நீரின்றி அமையாது உலகு"என்று நீரின் முக்கியத்துவத்தை திருவள்ளுவர் வான்சிறப்பு என்னும் அதிகாரத்தில் சிறப்பித்துக் கூறியுள்ளார். மரத்தின் முக்கியத்துவம் பற்றியும் ,மழைநீரின் முக்கியத்துவம் பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.

பொருளுரை:

நம் முன்னோர் மாரியல்லது காரியமில்லை என்று மழையின் முக்கியத்துவத்தை அன்றே கூறியிருந்தனர்.இளங்கோவடிகள் 'மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்' என்று மழையைப் போற்றி வணங்கி தம் காப்பியத்தை தொடங்கினார்.

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்:

மரம், செடி, கொடிகள் மழை பெய்வதற்கு முக்கிய காரணிகளாகும். வான்வழி மிதந்து வரும் மேகக் கூட்டங்களைக் குளிரவைத்து மழையாய் பொழியச் செய்வது மரம் ,செடி கொடிகள் தாம்.மக்கள் தொகை பெருக்கத்தால் அவை இருந்த இடங்கள் மக்கள் வாழும் இடங்களாக மாறி வருகின்றன. அதனால் மழை குறைந்து வருகிறது.

மழைநீர் சேகரிக்கும் தளங்கள்:

மழைநீரை பல்வேறு வழிகளில் சேகரிக்கலாம்.மொட்டை மாடியில் விழும் மழைநீரை குழாய்கள் மூலம் தரைப்பகுதிக்கு கொண்டு வந்து கிணற்றுக்கும், வீட்டு சுவருக்கும் இடையில் தொட்டி அமைத்துச் சேகரிக்க வேண்டும். அங்கு வடிகட்டிய பின்னர் திறந்தவெளி கிணற்றுக்குள் மழை நீரை விழச்செய்து சேகரிக்கலாம்.

மழைநீர் சேகரிக்கும் முறை:

திறந்தவெளிக் கிணறுகள் இல்லாத வீடுகளில் மொட்டை மாடியில் இருந்து கொண்டுவரப்படும் மழைநீரை சிறு கால்வாய் மூலம் வடிகட்டும் தொட்டிக்குள் பாய்ச்சவேண்டும். அங்கிருந்து சிறு தொட்டிக்குள் மழைநீரைச் செலுத்தி சேகரிக்கலாம்.

திறந்த வெளிகளில் அல்லது வீட்டை சுற்றி தேங்கும் மழைநீரைக் கசிவு நீர்க் குழிகள், கசிவு நீர்ப்படுகை, துளை உள்ள நீர்ப் படுகைகள் நிறைந்த ஆழமுள்ள நீரூற்றுக் கிணறுகள் ஆகியவற்றின் மூலம் சேர்த்து மழைநீரை சேகரிக்கலாம்.

முடிவுரை:

மழைநீரைச் சேமிப்போம். வாழ்விற்கு வளம் சேர்ப்போம். விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! மழைநீரைப் பேணிக்காப்போம்! வளமாக வாழ்வோம்!

Answered by logaprabhasl
3

Answer:

மழை நீர்

குறிப்புச்சட்டகம்:

  • முன்னுரை
  • மழை நீர்
  • மழைநீர் சேமிப்பு
  • மழைநீர் சேமிப்பு விளைவுகள்
  • முடிவுரை

முன்னுரை:

“நீரின்றி அமையாது உலகு” என்பது அனைவரும் அறிந்தது.இந்த உலகம் நீரின்றி இயங்காது என்றே கூற வேண்டும். அனைத்து உயிர்களுக்கும் உயிர்வாழ அடிப்படை ஆதாரமாக விளங்குவது நீராகும்.நீரானது பூமிக்கு பல வழிகளிலும் கிடைக்கப்பெறுகின்றன.எனினும் அதிகளவான நீரானது பூமிக்குள் மழைநீரின் மூலமே கிடைக்கின்றது. இக்கட்டுரையில் மழைநீர் சேமிப்பு பற்றி காண்போம்.

மழை நீர்:

மழைநீர் மிகவும் இன்றியமையாத நீர்வளமாகும். மனிதன் உயிர் வாழ்வதற்கு நீரானது முக்கியமாக விளங்குகின்றது. நீரானது ஆவியாகிப் பின்னர் மழை நீராக பூமியில் பொழிகிறது.மழைநீரினால் மனிதன் உட்பட தாவரங்கள்⸴ விலங்குகள்⸴ பறவைகள் என அனைத்தும் பயன் பெறுகின்றன. மழைநீரை நம்பியே விவசாயம் மேற்கொள்ளப்படுகின்றது. எனவே விவசாயத்திற்கும் மழைநீர் அவசியமாகின்றது.ஒரு வருடத்தில் கிடைக்கப்பெறும் மழைநீரினை அடிப்படையாகக் கொண்டே இரண்டு அல்லது மூன்று போக விவசாயம் செய்யப்படுகின்றது. எனவே இவ்வுலக மக்களின் பஞ்சத்தை போக்குவதற்கு மழைநீரின் பங்கு முக்கியமானதாகும்.

காட்டு மரங்கள் செழிப்பாக வளர்வதற்கும்⸴ உயிர்ப்புடன் இருப்பதற்கும் மழைநீர் முக்கியமானதாகும்.

மழைநீர் சேமிப்பு:

அநாவசியமாகக் கடலோடு கலக்கவிடாமல் மழைநீரை சேகரித்து பயன்படுத்திக் கொள்வதற்கு பல வழிமுறைகள் காணப்படுகின்றன.குறிப்பாக முன்னோர்கள் மழைநீரைச் சேகரித்து வைப்பதற்காக பல குளங்களை அமைத்து மழைநீரை சேமித்தனர்.நவீன முறையில் மழைநீரைச் சேமிப்பதற்கு பல வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக தொட்டிகள் அமைத்து மழைநீர் சேகரிக்கப்படுகிறது.

கூரைகளிலிருந்து விழும் மழைநீரை நிலத்தடியில் தொட்டி அமைத்து சேகரிப்பு முறை இடம்பெறுகின்றது.ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் குளங்களை தூர்வாரியும் மழைநீர் சேகரிக்கப்படுகின்றது.

மழைநீர் சேமிப்பு விளைவுகள்:

இயற்கை நமக்கு இலவசமாக மழை நீரைக் கொடுத்து இருக்கின்றது. . நிலத்தடி நீர்மட்டம் குறைவடையும் பிரச்சினை மழைநீர் சேகரிப்பின் மூலம் நிவர்த்தி செய்யப்படுகின்றது.மேலும் குடிநீர் கட்டணங்கள் வெகுவாக குறையும், அதிகப்படியான வெள்ளம் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது, வேதிப் பொருட்கள் நிறைந்த அசுத்தமான நீருக்கு பதிலாக நன்னீர் கிடைக்கும், வேளாண் நிலங்கள் புத்துணர்வு பெறும்.

முடிவுரை:

மழைநீர் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்த அரசு பல சட்டங்களையும் விழுமியங்களையும் வலியுறுத்துகின்றது. மழைநீரின் அவசியத்தை குழந்தைகளுக்கு உணர்த்துவதற்காகவே ஆரம்பக் கல்வியிலேயே மழைநீர் சேமிப்பு பற்றி கற்பிக்கப்படுகின்றது.எனவே மழைநீர் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து நாம் அனைவரும் செயற்பட வேண்டும்.

#SPJ3

Similar questions
Math, 6 months ago