India Languages, asked by StarTbia, 1 year ago

நந்திக்கலம்பகம் யார் மீது பாடப்பெற்றது?
குறுவினாக்கள்
நந்திக் கலம்பகம்

Answers

Answered by Karishmadbm
1
மூன்றாவது நந்திவர்மன் மீது பாடப்பெற்றது.
Answered by gayathrikrish80
1

விடை:


மூன்றாம் நந்திவர்மன் வீரத்தை பாடுபொருளாக வைத்து பாடப்பட்ட காரணத்தினால் நந்திக்கலம்பகம் எனப் பெயர் பெற்றது.  


விளக்கம்:


தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்தி வர்மனைப்  பாராட்டிப் போற்றும் நந்திக் கலம்பகம் புகழ்மிக்க  கலம்பகமாய் அமைகிறது. நந்திவர்மனின் மாற்றாந்தாய் மகன்,  நந்தி மீது வஞ்சம் கொண்டு அறம் வைத்துப் பாடியதே இந்நூல்  என்பர். ஒருவர் இறக்குமாறு எழுத்துக்களை அமைத்துப்  பாடுவது அறம் பாடுதல் எனப்படும். 


அது தெரிந்தும்  நந்திவர்மன் பந்தலில் அமர்ந்து அரங்கேற்ற நிகழ்வைப்  பார்க்க, இறுதிப்பாடலில் பந்தல் தீப்பிடித்து எறிய அவன்  கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும். சொற்சுவை,  பொருட்சுவை மிக்கதாய் நந்திக் கலம்பகம் அமைகின்றது. 

Similar questions